”அறிவிருக்கா உனக்கு எங்கிட்ட ஏன் சொல்லலை”
”சின்னம்மா உங்ககிட்ட தகவல் சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன்ங்க”
”இப்ப அவள் எங்க இருக்கா”
”அடுக்குமாடி குடியிருப்புக்குள்ள போனாங்க, எந்த வீட்டுக்குள்ள போனாங்கன்னு தெரியலைங்க ஐயா”
”போலீஸ் கிட்ட போய்யா போய் விவரம் சொல்லு”
”என்னை ஒரு வீட்டு ரூம்ல அடைச்சி வைச்சிட்டாங்கய்யா, சாப்பாடு கொடுத்துட்டாங்க, வெளிய தாப்பாளும் போட்டாங்க, இனி நான் என்ன செய்றதுன்னு தெரியலைங்க”
”போன் இருக்குல்ல அதுல இருந்து போலீஸை கூப்பிடு”
“என் முன்னாடி ஒருத்தன் இருக்கான்ங்கய்யா, போனே ஸ்பீக்கர்லதான் இருக்கு போனும் அவன் கையிலதான் இருக்குய்யா”
”யாரு அவன்”
”தில்லையோட அடியாள்” என டிரைவர் யாரென சொல்வதற்குள் அவனை பார்த்துக் கொள்ளும் ஒருவன் சொல்ல கைலாசத்திற்கு வேர்த்துவிட்டது
”என் தங்கச்சி பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சி, உங்களை சும்மா விடமாட்டேன்” என பொங்க அவனோ கலகலவென சிரித்துவிட்டு போனை கட் செய்தான்.
அவரோ அடுத்த முறை போன் செய்ய அது சுவிட்ச் ஆப் என வரவே அவருக்கு என்ன செய்வதென தெரியவில்லை, சம்யுக்தாவை பற்றிய தகவலை அனைவரிடமும் சொல்ல