அடிபட்டிருக்கு, அப்புறம் எதிரியாளுங்களுக்கும் அடிபட்டிருக்கு”
”பார்த்துட்டுதான் வரேன்“
”உனக்கு யார் தகவல் சொன்னது“
”ஏன்டா போலீஸ் டிபார்ட்மென்ட்ல நடக்கறத பத்தி தகவல் சொல்ல உன்கிட்ட நான் இருக்கற மாதிரி உன்னை பத்தி தகவல் சொல்ல என்கிட்டயும் ஆள் இருக்கு”
”யாரு சித்தனை சொல்றியா“
”ஆமாம் அவன்தான் சொன்னான், முதல்லயே போன் போட்டு சொல்லிட்டான், அங்கிருந்து கிளம்பி இங்க வர்றதுக்குள்ள லேட்டாயிடுச்சி அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சி“
”ஏன்டா இப்படியிருக்கீங்க சினிமாலதான் போலீஸ் கடைசியா வரும்னா நிஜத்திலயுமா”
”நீ சொன்னா ஆச்சா, நீ இங்க இருக்க, நான் எவ்ளோ தூரத்தில இருக்கேன் வரவேணாமாடா”
”சரி என்ன விசயம் சொல்லு”
”அந்த கருணாவோட ஆளுங்களை நீ பிடிச்சிக்கிட்டதால கருணா தன்னோட இருப்பிடத்தை வேற இடத்துக்கு மாத்திட்டான்னு அங்க இருந்த என் ஆளு ஒருத்தன் தகவல் சொல்லிட்டான் இனி என்ன செய்றது”
”தெரியலை இரு அவன் எங்க இருக்கான்னு விசாரிச்சி தகவல் சொல்லட்டும் அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிக்கலாம்”
”அவனை நீ கொன்னாதான் உன்னால உயிரோட இருக்க முடியும்“
”ப்ச் அதை விடு இதைப்பாரு” என சம்யுக்தாவை காட்டினான். சிவாவும் அவளை பார்த்து குழம்பினான். அவளோ போலீசிடம்