போயிடுமா” என கெஞ்ச அவளோ அவனை முறைத்தாள், அவளின் முறைப்பைக் கொண்டே புரிந்துக் கொண்டான் தில்லை
”ஆக நீ போக மாட்ட அதானே“
”ஆமாம்”
”உன்னை திருத்தவே முடியாது 1000 எதிரிகளை கூட நான் அழிச்சிடுவேன் ஆனா, நியாயம் கேட்டு வந்த உன்னை அழிக்க கூட மனசு வரலை, அதனாலதான் இன்னும் நீ உயிரோட இருக்க, அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்க, எனக்கு கோபத்தை வரழைக்காத, அப்புறம் எனக்கு கோபம் வந்தா நான் ரொம்ப மோசமாயிடுவேன், யார் மேலயும் இரக்கம் கூட காட்டமாட்டேன் அந்த மாதிரி நிலைமை வர்றதுக்குள்ள என்னை விட்டு போயிடு“
”முடியாது நான் போக மாட்டேன், எனக்கு நியாயம் கிடைக்கறவரைக்கும் ஓய மாட்டேன்” என்றாள் உறுதியாக
அவனோ எட்டி எட்டிப் பார்த்தான்.
”யாரை பார்க்கற“
”எதிரிங்க வராங்களான்னு பார்க்கிறேன்“
“கோயிலுக்குள்ள கெட்டவங்க வருவாங்களா, வரமாட்டாங்க, அப்படி வந்தா சாமி தண்டிச்சிடும்னு அவங்களுக்குத் தெரியாதா“
”அப்ப என்னை சாமி தண்டிக்காதா“
”உன்னையும் தண்டிக்கும் ஆனா, இப்ப இல்லை கண்டிப்பா எதிரிங்க வரமாட்டாங்க” என சொல்லும் போதே ஆட்கள் வரவும் அதிர்ந்தாள்
”என்ன இவனுங்க உன்னை விட கெட்டவன்ங்களா இருக்கானுங்களே, கோயில்குள்ளயே