அந்நேரம் அவனுக்கு போன் வந்தது
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
”எதுக்காக இந்த ரிங்டோன் வைச்சிருக்கீங்க”
”அது என் இஷ்டம்”
”அதான் உங்களை காதலிச்ச பொண்ணை உங்க நண்பனுக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிட்டீங்கள்ல, இன்னும் என்ன அவங்க நினைப்பு”
”இதப்பாரு என் வாழ்க்கை, நான் எப்படி வேணும்னாலும் வாழ்வேன், இருப்பேன், நீ எதுக்கு தலையிடற, உன் வேலையை மட்டும் பாரு”
”அப்ப நீங்க இன்னும் ஜனனியை மறக்கலையா, அவங்களை விரும்பறீங்களா”
”இல்லை அவளை நான் விரும்பலை, விரும்பனும்னு எண்ணம் கூட வரலை, அவள் என் தோழி அப்படித்தான் பார்த்தேன், அப்புறம் அவளே தன் காதலை சொன்னப்பதான் என் வாழ்க்கையில பல பிரச்சனைகள் வந்தது, அதுல நான் இந்த ஊர்ல பெரிய தாதாவான அம்பலத்தானை கொன்னேன் என் பர்சனல் விசயத்துக்காகத்தான்
அடுத்து அவன் இடத்தில நான் உட்கார்ந்தேன், எப்ப நான் பாதை மாறி தாதாவா ஆனேனோ அப்பவே என் உசுருக்கு கெடு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன், என்னால பாவம் ஜனனி வாழ்க்கை ஏன் பாதிக்கனும்னு அவளுக்கும் சிவாவுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிட்டேன், ஏதோ என்னால முடிஞ்ச நியாயத்தை அவளுக்கு வழங்கினேன். இப்ப அவள் புருஷன் குழந்தைன்னு குடும்பமா சந்தோஷமா இருக்கா அது போதும் எனக்கு, இதே நான் அவளை கல்யாணம் பண்ணியிருந்தா அவள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா, எதுக்கு என்னால அவள்