வெள்ளை நிற சுரிதாரில் தேவதையாக புவனேஸ்வரி வந்துக் கொண்டிருந்தாள்.
“ஈஷ்!”
அவள் அவன் பக்கத்தில் வந்து சேரும் வரைக்கும் காத்திருக்காமல், ஓடாத குறையாக அவள் வரும் திசை நோக்கி வேகமாகச் சென்றான் ஜெய்.
புவனேஸ்வரி இன்னும் அவனைப் பார்க்கவில்லை. அந்த பெஞ்ச் நோக்கி வரும் பாதையில் முட்கள் இருக்கும் என்பதால் தலையை குனிந்து கவனமாக பார்த்து நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
இன்னும் வேகத்தை அதிகமாக்கி அவளை நோக்கி சென்றான் ஜெய்.
அவள் பக்கம் சென்ற பிறகும் வேகத்தை குறைக்காமல் அதே வேகத்துடன் அவளை கட்டி அணைத்துக் கொண்டான். பேசவோ, விலகவோ அவளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவளின் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்.
அவளின் உதட்டை ஸ்பரிசித்தப் பிறகு தான் அவனால் இயல்பாக மூச்சு விடக் கூட முடிந்தது. அவளை விட்டு பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு நரகம் தான்!
அவனின் உதட்டினால் மூடப் பட்டிருந்த அவளின் உதடுகள் மெல்ல அசைந்தன. அவன் அவளை விடுவிக்காமல் தன் முத்தத்தை ஆழப்படுத்தினான். அவனது விரல்கள் அழகாக இருந்த அவளின் கூந்தலின் உள்ளே சென்று வருடின. அந்த பட்டு கூந்தலின் மென்மையில் அவனின் மனம் மயங்கியது. இவளிடம் எல்லாமே