***************
இந்த பந்தா பரமசிவம் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இவர் பணக்காரர்! இல்லை, முன்னாள் பணக்காரர்!
அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா என பரம்பரையாக வந்த சொத்தை ஒவ்வொரு தலைமுறையிலும் இவரைப் போலவே அனைவரும் வெட்டியாக பந்தா செய்து, பணத்தை தேவை இல்லாமல் செலவு செய்து செய்து, இப்போது கிட்டத்தட்ட ஓட்டாண்டியாக மாறி இருப்பவர்.
இருந்தாலும் ஓல்ட் கெத்தை விடாமல் அதே பணக்கார பந்தா பரமசிவமாக காட்டிக் கொள்வதில் அவருக்கு தனி மகிழ்ச்சி.
இவருடைய மனைவி பார்வதி இறந்து பத்து வருடங்களாகி விட்டது. மறுமணம் செய்துக் கொள்ளும் ஆர்வம் அவருக்கு வரவில்லை. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் ராஜேஸ்வரி, இளையவள் புவனேஸ்வரி.
ராஜேஸ்வரி அச்சு அசல் பரமசிவத்தின் வாரிசு. தன்னை மேக்கப் செய்து அழகியாக காட்டிக் கொள்வது அவளுடைய முக்கிய பொழுதுபோக்கு. தோற்றத்திற்கு தரும் முக்கியத்துவத்தை அவள் வேறு எதற்கும் கொடுத்தது கிடையாது. இருந்தாலும் அந்த அழகில் மயங்கி பணக்கார வீட்டு வாரிசான ராம் அவளை திருமணம் செய்துக் கொண்டான். அது முதல் அவளின் அல்டாப்ஸும் எந்த குறைவும் இல்லாமல் வளர்ந்துக் கொண்டே போய் கொண்டிருக்கிறது!
இளையவள் புவனேஸ்வரி அவளுடைய அம்மாவின் குண