அவளை தடுக்காமல் உதயும் எழுந்துக் கொண்டான்.
“ரைட்... ரொம்ப சரி... நதி, இதுக்கு அப்புறம் நேரா கல்யாணத்துல தான் மீட் செய்வோம்னு நினைக்கிறேன்... அந்த நாளுக்காக... நீ என் மனைவி ஆக போற வினாடிக்காக காத்திருக்கேன்!”
“தெரியும்,” என்ற நந்திதாவின் மனம் கட்டுக்கடங்காமல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது...
சில நிமிடங்களுக்கு முன் கோபம் பொங்க இருந்தவள் அவள் தான் என்று அவளாலேயே கூட நம்ப முடியவில்லை!!!
இருவரும் ஒன்றாக நடந்து ரெஸ்டாரன்ட்டில் இருந்து வெளியே வந்தார்கள்... தூரத்தில் துளசியும் ப்ரியாவும் நிற்பது தெரிந்தது...
“ஓகே நதி... கல்யாண மண்டபத்துல சந்திப்போம்,” என்றான் உதய்!
“ம்ம்ம்ம்...”
“நான் ஒரு சக்சஸ்ஃபுல் பிஸ்னஸ் மேன் நதி... சும்மா ஃப்ரீயா எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன்...”
இப்போது எதற்கடா இதை சொல்கிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள் நந்திதா...
“நீ சொல்லாமலே உனக்கு பிடிச்ச சாரீயை வாங்கி கொடுத்தது எல்லாம் ஃப்ரீ சர்விஸ் கிடையாது... ப்ரீமியம் சர்வீஸ்... நியாய படி பார்த்தா நான் அப்போவே என்னோட ஃபீஸ் ஆன கிஸ்ஸை கேட்டு வாங்கி இருக்கனும்... பட் உனக்காக ஸ்பெஷலா எக்ஸ்ட்ரா டைம் தரேன்... கல்யாணம் ஆனப்புறம் கடனை அடைச்சிடு...”
“நா...ன்....” என்று அவள் திக்கி திணற, அதை ரசித்துக் கொண்டே,