“சரி, நீ சாப்பிடு.”
“எனக்கு வேண்டாம்.. எனக்கு அம்மா தான் வேணும்... அம்மா... ம்ம்மா...”
ரேஷ்மி சத்தமாக அழ தொடங்கவும், கமல் அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் திகைத்து நின்றான்.
ஆனாலும் மெல்ல சமாளித்து,
“அம்மா எங்கேயும் போகலை பாப்பா,” என அவன் சொல்ல தொடங்கிய போது, ரோஷனி, பூங்கோதை, கவிதா என மூன்றுப் பேரும் ஒவ்வொருவராக அங்கே வந்தார்கள்.
“என்னடா ரேஷூ எதுக்கு அழுகை,” என கேட்டப்படி ரேஷ்மியை தூக்கி அணைத்துக் கொண்டாள் ரோஷனி.
பூங்கோதை குழந்தையின் கண்களில் இருந்த கண்ணீரை துடைக்க, கவிதா,
“அத்தை செல்லம்ல நீ, அழக் கூடாது...” என குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றாள்.
ரோஷனியின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்ட குழந்தையின் அழுகை ஒரே நிமிடத்தில் நின்றுப் போனது.
“சித்தி உனக்கு ஊட்டி விடவா??”
சரி என ரோஷனி தலை அசைத்தாள்!
அதே இடத்தில் பக்கத்தில் இருந்து இதை எல்லாம் கவனித்த கமலுக்கு என்னவோ போல இருந்தது.
ரேஷ்மிக்கு வேண்டிய ‘சுமி போன்ற’ அன்பும், பாசமும், அங்கிருந்த மூன்று பெண்களால்