“ஹரி சூப்பர்பா ..... நான் இத்தனை பெரிய வரவேற்பை எதிர்பார்களை ... ரொம்பப் பிரமாதம் .......”
“ம்ம்.................. எனக்கும் ரொம்ப எக்ஸய்டெட்டா இருக்கு ...”
“வாங்க ஹரி... வாம்மா சுபா ... பிரயாணம் சௌக்கியமா இருந்ததா????.....”
‘இவள் பெயர் சுபாவா... என்ன அழகான பெயர்.....’ உற்சாகத்துடன் புன்னகைத்தான் ரவி..
“ஹரி... அந்த ஜீவன் நம்மை வரவேற்க வரவில்லையா?.............”
“ஹே!!!!!!.........................”
“அது யாருன்னு கண்டுப்பிடிசிட்டியா?........”
“ஹரி நான் சுனாமில ச்வினம் பண்றவளாக்கும்.. என்கிட்டையே வா....”
“ம் ம்... பேஷ் பேஷ்.......”
இருவரும் சிரித்தனர் ..
“அந்த ஜீவனை பார்க்க ஆசை ஆசையாய் உள்ளது ஹரி அவர்களே... கொஞ்சம் கருணை காட்ட கூடாதா?.....”
“எனக்கும் தான் ஆசையாய் உள்ளது சுபா அம்மையாரே......”
“இது என் இரண்டாம் மகள் மஹா, இது என் இளைய மகள் ...”
“தாயார் அம்மாள்...”
“அடடே.. சுபா உனக்கு எப்படி தெரியும்... ஓ ஹேமா சொல்லியிருப்பா....”
“ம் .. ஆமா அங்கிள்... ஆன்டி தான் சொன்னாங்க.....”
“அபி.... கொஞ்சம் வாம்மா....”
“ஹரி இது என்னோட முதல் மகள் அபிநயா , ......” ஹரிக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாலா...
பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தான் ஹரி.. அதே மனநிலையில் தான் சுபாவும்....
ஹேமாவின் சாயலில் இருந்தாள் அபி... அப்படியே... அதேபோல் .. இன்னும் சரியாக சொன்னால் பிம்பம்.... இருவருக்கும் ஒரு சிறு வேறுபாடு இருந்தது... அபியின் கன்னத்தில் இருக்கும் மச்சம் ஹேமாவின் முகத்தில் இல்லை... ‘அதே சிரிப்பு அதே பார்வை அதே தான் அப்படியே தன் தாயை போலவே இருக்கிறாளே....’
‘அட ஹேமா ஆன்ட்டியை போலவே இருக்கிறாளே...’ எண்ணியதை சொல்லியும் விட்டாள் சுபா...
“இவங்க ஹரியோட தோழி சுபா ... உனக்கும் தோழி போல தான் அபி... “
சினேக பார்வை பரிமாற்றங்களுக்கு பிறகும் ஹரி இன்னும் தெளிவானப்பாடில்லை...
‘சரியா போச்சு .... இவன் நமக்கு மேல் போல......’
“ஹரி... அப்படித்தான் அப்படித்தான்..... இன்னும் கொஞ்சம் கிழேவா.... இன்னும் கொஞ்சம்........”
“ஹே ... உன்னை .....”
“ஹரி .. அபி ஆண்டியை போலவே இருக்கிறாளே.....”
“ஆமா சுபி எனக்கும் அதே ஆச்சர்யம் தான் ....”
“அதை உன் திருமுகத்தை பார்த்தே கண்டுப்பிடித்துவிட்டேனே............”
“ம்... இப்போது உனக்கு நேரம் நல்ல இருக்கு போல....”
எழில் மிகுந்த மேட்டுப்பாளையத்தில்......
“ஐயா...நம்ம தம்பி சோலைபுரம் வந்தாச்சுங்க .....”
“ம்.....”
“ஐயா நீங்க ஏர்போர்டிற்குப் பார்க்கப்போகலைங்களா?...”
“இல்லை பொன்னுசாமி ... இத்தனை வருசம் கழிச்சு வரான்... சந்தோசமா இருக்கட்டும்......”
‘எப்போ இந்த சோகம் தீரும்.... இந்த கஷ்டங்களை சீக்கிரமே தீர்த்துவிடு கடவுளே.....’மனதார வேண்டிக்கொண்டான் பொன்னுசாமி..
“அப்பா நான் சோலைபுரம் போயிட்டுவரேன்....” சந்தோஷமாய் சிகிலடித்துக்கொண்டு வந்தான் விஷ்ணு .....
“சரிப்பா ... “
“நேரத்துக்கு சாப்பிடுங்கபா.... பொன்னுசாமி அண்ணன்கிட்ட சொல்லிட்டு போறேன்... நீங்க சாப்பிட்டு முடிக்கும் வரை அவர் உங்க கூட இருப்பார்.....என்னை ஏமாத்தமுடியாது .....”
“சரிப்பா .... “மனதிற்குள் நெகிழ்ந்தார் கைலாசநாதர்......
சோலைபுரம்......
“மாமா........”
“அடே வாப்பா ... ஹரி வந்திருக்கான்.....”
“என்ன ? ... எப்போ வந்தாரு?..... எப்படி இருக்காறு? .....”
“பொறுப்பொறு ..... இத்தனை கேள்விகளுக்கும் நீயே விடை கண்டுப்பிடிக்கலாம்......”
“எப்படி....”
“மேலே மாடில அவன் ரூம் .. அடடே உனக்கு கால்கள் இருக்கே ... அப்போ நீயே போகலாம் .........”
“எல்லாம் என் நேரம் ... மாமா எனக்கு கால்கள் மட்டும் இல்லை இரு கைகளும் ஒரு வாயும் கூட இருக்கு .....“
“அதை வச்சு எப்படி அவன் ரூம் க்கு போவ ....”
“அட மங்குனி மாமா ... நான் அவர் ரூம்க்கு போகவே தேவையில்லை ... அவர் பெயர் சொல்லி கைத்தட்டி குப்பிட மாட்டேனா..... “
“அட... அப்போ உனக்கு அறிவு கூட இருக்கா.....???!!!!!............. ”
“மாமா.......................”
“சரி சரி .. போ பாத்துட்டு வா........”
‘அவர் எப்படி இருப்பார்... என்னை நினைவு வைத்திருப்பாரா?..... ஹரி அவனை விட கூடுதல் அழகுன்னு அப்பா சொன்னாரே.... இப்ப எப்படி இருப்பார் ......... ஐயோ அவர் வரபோவதை சொல்லியிருந்தால் எதாவது ப்ரெசென்ட் வாங்கி வந்திருக்கலாமே .....’
மாடிக்கு போக எத்தனித்தவன் நேரே தோட்டத்திற்கு சென்றான்.... வண்ண வண்ண மலர்களுக்கா பஞ்சம் நம் தோட்டத்தில்.....
மிக அழகாக ஒரு பூச்செண்டை அமைத்துவிட்டான் விஷ்ணு.....
‘ஓகே... இப்போது போகலாம் ......’
இரண்டுப்படிகளாக ஏறி இல்லை தாவிச் சென்றான்............
‘அவன் ஹரி ரூமை நோக்கி சென்றான் ‘
“உள்ளே வரலாமா?.....”
“எஸ்....”என்றவாறு பால்கேனியில் இருந்து திரும்பிப் பார்த்தான் ....
‘யார் இவன்... எங்கயோ பார்த்த நியாபகம் ... ஆனால் எங்கே .... இவனுடன் பழகியதாக இதயம் சொல்லுதே ....யார் இவன்..... கையில் பூங்கொத்து .. சோ,நம்மை பார்க்க தான் வந்திருக்கான் ..... சரி யாரென்று கேட்போம்.....’
“எஸ்.... உட்காருங்க...” அருகில் இருந்த சோபாவை கட்டி சொன்னான்.....
‘என்ன இவன் முகத்தில் இத்தனை சந்தோஷம் ..... கண்களில் நீர் ... முகத்தில் சந்தோஷம் தெரிகிறது சோ....கண்ணீராக இருக்க வாய்ப்பில்லை ....
ஓ ஆனந்த கண்ணீரோ.... ஆனால் நம்மை பார்த்து ஏன்???!!!!...... ‘
ஹரியின் முகபாவனையை படித்தது போல் அவன் உடனே நினைவுலகம் வந்து சேர்ந்தான் ........
“என்னை நியாபகம் இருக்கா ....?”
“இல்லை .. ஆனால் எங்கோ பார்த்த நியாபகம் .... உங்க கூட பழகிய மாறி ஒரு பீலிங்....எனக்கு நெருக்கமானவர் போல் தோன்றுகிறது .....”
‘அவன் சொல்வதை கேட்டு கத்தியே விட்டான் விஷ்ணு..
“அண்ணா ...............................”
தொடர்ந்து பாயும்.......
{kunena_discuss:685}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.