"இதுவா ஆதி, உங்களுக்கு பிடிச்சுருக்கா?"
"ம்ம்ம் ஆனா?"
"ஒஒஒ அந்த கவிதைய சொல்றீங்களா இந்த கவிதைக்காக தான் நான் இந்த பெயிண்டின்கவே வரைஞ்சேன், ரொம்ப எதார்த்தமா நல்லா இருக்குல்ல"
உன்மீதான என் காதலை
தெரிந்துக் கொள்ள விரும்பினால்
என் தலையனையிடம் கேள்!!!
உன்னை எண்ணி உறங்காத இரவுகளில்
நான் புலம்பியதை எல்லாம்
கதை கதையாய் சொல்லும்!!!
கண்களை மூடி அந்த கவிதையை தான் எழுதியதை போல ரசித்து சொல்லி கொண்டிருந்தவள் அதை எழுதியவள் பற்றியும் சொல்ல தொடங்கினாள் அருகில் இருப்பவன் முகம் மாறுவது தெரியாமல்.
"அழகா எழுதிருக்காங்க ஆதி யாரோ மதுமிதான்னு ஒரு Rj லாஸ்ட் மந்த் அவங்க ப்ரோக்ராம் ஒன்னு ஆன்லைன்ல ட்யூன் பண்ணி கேட்டேன் அதுல தான் இந்த கவிதை சொல்லி இருந்தாங்க, ஷி இஸ் சிம்ப்லி சூபெர்ப்"
"ஷட் அப்" என்று கத்தினான் ஆதி.
திகைத்து பொய் கண்களை திறந்து அவள் பார்த்த அவனின் தோற்றம் அவளை மிரட்ட, செய்வதறியாது அவனையே பார்த்தாள். ஆத்திரம் போங்க ஒரு பார்வை பார்த்து விட்டு விறுவிறுவென கீழே சென்று விட்டான்.
"நீங்க யாருன்னு இன்னும் சொல்லலையே சார்?"
"யாரும்மா இது" என்று திவாக்கர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயங்கி அவள் நிற்கவும், தெரிந்திருந்தாலும் சொல்ல விருப்பமில்லாமல் ரகு முறைக்கவும் அவனே தன்னை அறிமுகப் படுத்தினான்.
"என்ன மது என்ன யாருன்னு சொல்ல இவ்வளவு தயக்கமா" என்று தலையை சரித்து அவளை பார்த்த விதத்தில் ரகுவின் பீபி எகிறிக் கொண்டிருந்தது.
" ஐயம் பிரகாஷ் சார், மதுவோட... " என்ன சொல்லட்டும் என்பது போல் அவளை கேள்வியாக பார்த்தவன் திவாக்கர் தன்னை கவனிப்பது கண்டு அவசரமாக "க்ளோ....ஸ் பிரண்டு, பை தி வே க்லாட் டு மீட் யூ" என்று திவக்கரிடம் கையை நீட்டினான்.
"மை ப்ளெஷர்" என்று அவனும் கையை பற்றி குலுக்க, பழைய ஞாபகங்களில் வாடிய பூவாய் மது துவண்டு நிற்க, அவளின் தோளை தன் கைகளால் அரண் போல் வளைத்து "நான் இருக்கேன் அம்மு" என்று கண்களாலே நம்பிக்கை குடுத்தான் ரகு!!!!
காதல் பெருகும்…
{kunena_discuss:725}