அவளின் கேள்வியில் புன்னகைத்தாள் சுபத்ரா ...
(ரகுவுக்கு கோபமா? இன்றைய வரை அதை நான் பார்த்ததே இல்லையே ! )
" கண்டிப்பா மாட்டங்க டீ "
" இருந்தாலும் கஷ்டமா இருக்கு "
" சொன்ன நம்புடி "
" இல்ல எல்லாருமுன்னாடியும் அப்படி அழுதுட்டேனே ! "
" ஆண்டவா ? இப்போ என்ன ? உனக்கு அண்ணா கோபமா இருக்கங்களான்னு தெரியனும் அவ்வளோதானே ... உன் போன் கொடு .... இதுல அண்ணா நம்பர் செவ் பண்ணிட்டேன் ... உனக்கு டவுட் இருந்த நீயே கேட்டுக்கோ "
அதற்குள் அங்கே அர்ஜுனன் வந்தான் ..
" சுபி லேட் ஆச்சு நாளைக்கு பேசிக்கலாம் ... "
" அண்ணா எங்க? "
" கெளம்பிட்டாங்க"
அவன் பதிலில் ஜானகி சோர்வுற்றாள்..தன்னால்தான் அவர்கள் உடனே சென்றுவிட்டார்களோ ? (அவளுக்கு என்ன தெரியும் ? அவளின் துயரம் அறிந்துதான் பதில் பேச முடியாமல் அவர்கள் சென்றனர் என்று ? )
" ஹேய் ஜானு நீயும் வாயேன் சுபியை விட்டுடு வரலாம் "
" நான் எதுக்கு மாமா ....யாராச்சும் பார்த்தா ? "
" உன்னை கடத்திடு போக மாட்டங்க.... கார் ல தானே போக போறோம் "
" ப்ளீஸ் டீ எனக்காக வாயேன் "
" ம்ம்ம் சரி "
" பாருடா நான் சொல்லி வராதவ சுபி சொன்னதும் வராலாம்.... ஹ்ம்ம் நடத்துங்க " என்று சலித்து கொண்டவன் போல் நடித்தான் .... மூவரும் சுபத்ராவின் இல்லத்திற்கு சென்றனர் .... காரில் ,
( சுபத்ராவுக்கு உண்மை தெரிஞ்சிருக்குமா ? என்ற கேள்வியுடன் அர்ஜுனன் ...
வீட்டுல என்ன நடந்திருக்கும் ? கிருஷ்ணா அண்ணாவும் ரகுவும் என்ன சொல்ல போறாங்க? என்ற கேள்வியுடன் சுபத்ரா...
ரகுராம் சாருக்கு நம்ம மேல கோபம் இருக்குமா? இது அர்ஜுன் சுபியை பாதிக்க கூடாதே ? என்ற யோசனையுடன் ஜானகி ...
சுபத்ரா வீட்டுல என்ன நடக்கும் ? ஜானகி ரகுராம்க்கு கால் பண்ணுவாங்களா? அடுத்து என்ன நடக்கும் ? அடுத்த எபிசொட் ல சொல்லுறேன் )
தொடரும்
{kunena_discuss:734}