சீரான இடைவெளியில் ஷன்வியின் காரைத் தொடர்ந்து சென்றான் அவ்னீஷ்…
வீடு வந்ததும், ரிகாவை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலுக்கு விரைந்தாள் ஷன்வி…
“உள்ளே வான்னு கூப்பிடமாட்டியா?...”
“இப்போ வேண்டாமே…”
“ஏன்?...”
“ப்ளீஸ்…”
“சரிடா… எனக்குப் புரியுது…”
“அப்போ நான் கிளம்பவா?...”
“ஹ்ம்ம்…”
“ஹ்ம்ம் தானா?...”
“வேறென்ன சொல்ல?..”
“இன்னும் நாம் அந்த 3 வார்த்தை சொல்லலை… நினைவிருக்கா?...”
“இருக்கு…”
“அப்போ சொல்லுறது தான?...”
“சொல்லலாம்.. சொல்லலாம்… நேரம் வரும்போது…”
“நேரம் எப்போது வருமோ?...”
“வரும் வரும்… விரைவில்…”
“சரிதாண்டி… எல்லாம்… என் நேரம் தான்…”
அவனின் பதில் கேட்டு மெதுவாக சிரித்தாள் ஷன்வி…
“சிரிச்சிட்டே இருக்காமல் போன் நம்பர் கொடு…”
“யாரோட நம்பர்?...”
“உங்க… வீட்டு வாட்ச்மேன் நம்பர் தான்…”
“வாட்ச்மேன் இங்க இல்லையே….”
“தெரியுதுல்ல…. படுத்தாம… குடுடி…”
சிரித்துக்கொண்டே நம்பர் கொடுத்து அவனைக் கெஞ்சி அனுப்பி வைத்தாள் ஷன்வி…
மூன்று பேரும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர் சிறிது நேரம்… அப்போது ஹரீஷின் கைபேசி ஒலித்தது…
“ரிகா…” என்று திரையில் அவளுடன் புகைப்படத்துடன் சிரித்தது அவனின் கைபேசி…
மெல்லிய சிரிப்புடன், “இப்போ வந்துடுறேண்டா…” என்றபடி எழுந்து சென்றான் ஹரீஷ்…
அதை கவனித்த முகிலனின் மனம் யோசனையில் மூழ்கியது…
“நீ என்னடா யோசிக்கிற?...”
“…..”
“என்னடா… கேட்ட?...”
“டேய்… என்னாச்சு உனக்கு…?...”
“ஹரீஷிற்கு யார் இப்போ யார்கூட பேசிட்டிருக்கான் தெரியுமா?...”
“யாரோட?...”
“ரிகாவோட…”
“ஓ…”
“என்னடா.. ஓ… சொல்லுற?... ஷாக் ஆவேன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்ட?...”
“நான் ஏண்டா ஷாக் ஆகணும்?...”
“பின்னே ஆகவேண்டாமா?...”
“ஹாஹாஹா…”
“சிரிக்காம சொல்லுடா…”
“அவங்க ரெண்டு பேரும் தெரிந்தவர்கள் போலும்டா…”
“என்ன நடந்துச்சுன்னு சொல்லேண்டா பாவி…”
அங்கே நடந்த அனு-ரிகா-ஹரீஷ்-ஷன்வி உரையாடலை கேட்டு முகிலன் சுத்தமாக குழம்பி போனான்…
“என்னடா… கனவுக்கு போயிட்டியா? மறுபடியும்?...”
“….”
“டேய்… மச்சான்…”
“சொல்லுடா ஆதி…”
“என்னடா யோசனை உனக்கு இப்போ?...”
“அவனுக்கு என்னடா யோசனை?...” என்று கேட்டபடி ஹரீஷ் வந்தான்… சிரித்துக்கொண்டே…
“நான் யோசிக்கிறது இருக்கட்டும்… உனக்கு பின்னாடி ஒரு ஒளிவட்டம் தெரியுதே… என்ன விஷயம்?... அதை சொல்லு முதலில்…”
“ஒன்னுமில்லைடா முகிலா…. ரிகாவிடம் பேசினாலே… நிம்மதியா இருக்கும் எனக்கு… அதான்…”
“ரிகாவா அது யாருடா?...”
“எனக்குப் பிடித்தவள்”
“என்னது!!!!”
“நீ ஏண்டா அதிர்ச்சி ஆகுற?...”
“இல்லை இல்லை சும்மாதான்… நீ பசங்ககிட்ட பேசவே யோசிப்பியே… அதும் ஒரு பொண்ணுகிட்ட எப்படின்னு தான்…”
“எனக்கு அவளைப் பிடித்திருக்கிறதுடா…”
“என்ன!!!!!!!!!!!!!...”
“ஆமாடா… நிஜமா தான்…”
“அதுக்காக இப்படி மணி கணக்கில் பேசுவியா?...”
“அது ஒன்னுமில்லைடா… நிதமும் அவளிடம் நான் பேசிவிடுவேன்… நான் பேசாவிட்டாலும் அவளே என்னிடம் பேசிடுவாள்… இருவரும் நைட் பேசிவிட்டு தான் படுக்கவே செல்வோம்… என் ரிகா என்னிடம் பேசாமல் இருக்க மாட்டாள்டா…”
ஹரீஷின் பதில் முகிலனை வாயடைக்க செய்தது… முற்றிலும் அவன் உறைந்து போனான்…
“தூக்கம் வருதுடா… தலை வேற வலிக்குது… நான் தூங்குறேண்டா…. குட்நைட் ஹரீஷ், குட்நைட் முகிலா…” என்றபடி படுத்துவிட்டான் ஆதர்ஷ்…
“சரிடா.. நீ தூங்கு… “ என்று இருவரும் சொல்லினர்…
“ரிகாவை எப்படிடா உனக்கு தெரியும்?...”
“மும்பையில் தாண்டா… பார்த்தேன்… ஒரு வருடத்திற்கு முன்னால்…”
“ஓ…”
“நல்ல பெண்…”
“ஹ்ம்ம்ம்…”
“என்ன முகிலன் அண்ணா நீங்க ஹ்ம்ம் சொல்லுறீங்க…” என்று கேட்டபடி அங்கு வந்தான் அவ்னீஷ்…