" சொல்லுங்க பாஸ் "
" இந்த கீதாவும் கார்த்திக்கும் சுபத்ராவை ஒழுங்கா கவனிக்கணும் ... அதை விட்டுட்டு ஏதும் லவ் ஸ்டோரி கேள்வி பட்டேன் , அவ்வளவுதான் " என்று மிரட்டினான் ...
" ஊரு உலகத்துலே பத்து பதினஞ்சு பொண்ணை லவ் பண்ணுறவன் எல்லாம் அமைதியாத்தான் இருக்கான் .. ஆனா ஒரே ஒரு சுப்பியை லவ் பண்ணிக்கிட்டு இவர் பண்ணுற அலப்பறை இருக்கே ஷாபா" என்று முணுமுணுத்தான் கார்த்திக் ... அவன் முதுகிலே இரண்டடி வைத்துவிட்டு அர்ஜுன் அருகில் நின்றாள் சுபத்ரா ...
"அர்ஜுன் இவன் என்னை அடிகடி சுப்பின்னு சொல்லுறான் பாருங்க "
" டேய் என்னடா ? "
" பாஸ் ... கையை முறுக்காதிங்க பாஸ் ..எனக்கின்னும் கல்யாணம் கூட ஆகலை பாஸ் "
" அதுக்கு நீ உயிரோட இருக்கணும் தம்பி ... இனி அண்ணியை அப்படி சொல்லுவியா ? "
" அண்ணியா? "
" ஆமா நான் உனக்கு அண்ணன் மாதிரினா என் சுபி உனக்கு அண்ணிதான் ... அப்படி முடியாதுனா என்னை பாஸ் நு சொல்றமாதிரி அவளை முதலாளி அம்மான்னு சொல்லு "
" முதலாளி அம்மாவா? அதுக்கு அண்ணியே பெட்டர் "
" ஹஹாஹா போதும் அர்ஜுன் ... லெக்சரர் எல்லாரும் வந்துகிட்டு இருக்காங்க .. நாங்க கெளம்பட்டுமா ? " என்றாள் சுபத்ரா ....
" ம்ம் ஒரு நிமிஷம் கண்ணை மூடி கையை நீட்டு "
" ஏன் ?? சர்ப்ரைஸ் .... கைய நீட்டு "
" ஓகே ..."
அது ஒரு குட்டி தலையணை... அதுல என்ன ஸ்பெஷல் நா .. அந்த தலையணை மேல " ஐ லவ் யு " என்ற வார்த்தை பல மொழிகளில் அச்சிடபட்டு இருந்தது அதுக்கு நடுவில் நம்ம சுபத்ராவுக்கு பிடிச்ச வைட் ரோசே எம்ப்ராய்டரி இருந்தது ... அந்த ரோஜா நடுவில் " ஏ & எஸ் " என்ற ஆங்கில எழுத்தும் இருந்தது .....
" வாவ் லவ்லி அர்ஜுன் ... இது எனக்கே எனக்கா? "
" ஆமாடா .... என்னை மிஸ் பண்ணும்போது ஹக் பண்ணிக்கோ "
" அதென்ன மிஸ் பண்ணும்போது ? இன்னும் ஒரு வாரத்துக்கு இது என் கையிலேயே இருக்கும் "
அதுவரை பார்வையாளராக இருந்த கார்த்திக்,
" ஆமா உள்ளம் கொள்ளை போகுதே படத்துல பிரபு தேவா குளிக்கும்போது கூட பில்லோ எடுத்துகிட்டு போவாரு அந்த மாதிரி போ " என்றான்.... அனைவரும் அவனை பாவமாக பார்க்க " ஏன்?" என்று அவனும் திரும்ப அங்கே அர்ஜுன் ரௌத்ரமாக கையை மடக்கி அடிக்க வருவது போல நிற்க
" பாஸ் நான் ஒரு பச்சை மண்ணு பாஸ் .. உங்க லெவல் என்ன என் லெவல் என்ன ? என்னை எல்லாம் அடிச்சு நீங்க செம்பியன் நு பேரு எடுக்க வேணாம் பாஸ் " என்று கை எடுத்து கும்பிட அங்கே அனைவரும் வாய் விட்டு சிரித்தனர் ....
அர்ஜுன், கிருஷ்ணன் , மீரா மூவரும் வழியனுப்ப சந்தோஷமாய் கிளம்பினாள் சுபத்ரா ...
" ஏன் மீரா ஒரு மாதிரி இருக்கே "என்றான் அர்ஜுன்
" இல்ல அண்ணா ... நித்யா ஊட்டிக்கு போய்ட்டா ... இப்போ சுபாவும் கெளம்பிட்டா ..எனக்கு போர் அடிக்கும் .. சுபா இல்லாத வீடு கலையே இல்லாமல் இருக்கும் "
" இவளுக்கும்தான் சுபத்ரா மீது எவ்வளவு அன்பு " என்று கிருஷ்ணனும் அர்ஜுனும் ஒரே நேரம் மனதில் நினைத்து கொண்டனர் .. அதேவேளை கிருஷ்ணன் அர்ஜுனை பார்த்து ரகசியமாய் சிரித்தான் .. அர்ஜுனும் மெல்ல தலையாட்டினான் ... அதை மீரா கவனிக்காது அந்த பஸ் செல்லும் வழியையே பார்த்து கொண்டிருந்தாள்...
" நீங்க கெளம்பலையா ? "
" நீ போகலையாடா ? "
" நான் ரெடி பா ..... "
" அப்போ நானும் ரெடி "
" பார்க்கலாம் யாரு முதல்ல ஊட்டிக்கு போகலாம் நு " என்று அர்ஜுன் சொல்ல
" எஸ் சேலன்ஜ் " என்றான் கிருஷ்ணன் ... இருவரையும் மீரா புரியாமல் பார்க்க
" ஹே மக்கு ... நாமளும் இப்பவே ஊட்டிக்கு போறோம் " என்றான் கிருஷ்ணன்....
" நிஜம்மாவா கிருஷ் ?? அப்போ ஆபீஸ் ? "
" ரகு பார்த்துப்பான் "
" ஐயோ என் ஆபீஸ்? "
" அதெலாம் சஞ்சய் ராமசாமி கிட்ட பேசியாச்சு "
" அர்ஜுன் அண்ணாவுக்கு மீட்டிங் இருக்குன்னு சுபா சொன்னாலே "
" அதுவா தங்கச்சி ... ஹாஹஹ மீட்டிங் இருந்தது உண்மைதான் .. ஆனா என் சுபியை அனுப்பிட்டு மீட்டிங் அட்டெண்ட் பண்ண நான் என்ன லூசா ? அல்ரெடி 3 நாள் முன்னாடியே மீட்டிங் ஏற்பாடு பண்ணி முடிச்சிட்டேன் "
" கலக்குறிங்க அண்ணா... பாவம் அப்போ ஏன் சுபா கிட்ட சொல்லலை ? "
" அதுக்கு ரீசன் இருக்குடா ... எனக்கு எதோ மனசு சரி இல்ல ..அதான் நானும் போறேன் ... பட் நான் வரேன்னு தெரிஞ்ச அவ, அவளுடைய காலேஜ் லைப் ஐ என்ஜாய் பண்ண முடியாது .. சோ அவங்க எங்க போறாங்களோ அப்பபோ எனக்கு நியுஸ் வரும் நானும் ரகசியமா போவேன்... ஏதும் பிரச்சனை நா ... ஹீரோ மாதிரி என்ட்ரி கொடுத்து என் இளவரசியை தூக்கிட்டு போய்டுவேன்"
" எங்க சுபா ரொம்ப லக்கி அண்ணா ... "
" கிருஷ்ணா கூட லக்கிதான் இப்படி ஒரு சமத்து பொண்ணு மனைவியாக வர்றதுக்கு " என்று ஆதரவாக மீராவின் தலையில் கை வைத்து அவன் சொல்ல
" யாரு இவ சமத்தா ? விட்டா ஊட்டியையே வித்துடுவா ... சரியான நீலாம்பரி " என்றான் கிருஷ்ணன் ...
" அப்படிலாம் இல்ல கிருஷ்ணா... என் தங்கச்சி மனசு பலாபழம் மாதிரி ... வெளி தோற்றத்துக்கும் உள்ள இருக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ... மீரா அன்புக்கு கட்டுபடுற பொண்ணு .. வேணும்னா பாரு , இந்த ஒரு வார ட்ரிப் ல என் தங்கச்சியை நான் மாத்தி காட்டுறேனா இல்லையான்னு "
அவன் சொன்ன விதத்தில் மற்ற இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர் ....
அன்றிரவு,
" நியு யார்க் நகரம் உறங்கும் நேரம் " என அழகாய் சிணுங்கியது அர்ஜுனனின் செல்போன் .. ( ஒவ்வொரு சிட்டிவேஷனுக்கு ஒவ்வொரு ரிங்க்டோன் வைக்கிறார் பா நம்ம ஹீரோ )
" ஹெலோ குட்டிமா"
" அர்ஜுன், நாங்க பத்திரமா ஊட்டி வந்து சேர்ந்துட்டோம் .. ஐ மிஸ் யு அர்ஜுன் "
" நானும் தான் கண்மணி உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன் .. சரி இப்போ எங்க இருக்க நீ ? "
" ஹோட்டல் ரூம்ல ..."