(Reading time: 55 - 110 minutes)

 

ரி சார்…. நான் போய் அவளை வர சொல்லுறேன்…. அவ உடனே கிளம்பனும்னு வேற சொன்னா…. கீழே அவ வுட்பீ வெயிட் பண்ணுறாராம்….” என்றபடி சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள் சாகரி…

ஒரு கூடை தனலை தன் மேல் அள்ளி கொட்டிவிட்டு சிரித்தபடி சென்றவளைப் பார்க்க அவனுக்கு வலித்தது…. அதை விட, மயூரியே வந்து அவளது கல்யாணத்தைப் பற்றி சொன்னால் தன் மனம் இன்னும் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போய்விடும் என்று அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து கதவை திறக்க முற்படும்போது அவளும் சரியாக உள்ளே நுழைய மீண்டும் ஒருமுறை அவர்கள் மோதிக்கொண்டனர்….

தன் மேல் விழுந்தவளை பூவாக அணைத்துக்கொண்டவன், அவளை இன்னும் இறுக்கினான்…. கையை எடுத்தால் எங்கே அவளை விலக விட வேண்டி வருமோ என்றெண்ணி அவளிடத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டான்…

காதலை சொல்ல வந்தவள், இப்படி மயங்கி நின்ற நிலையை எண்ணி அவளே சிரித்துக்கொண்டாள்…. பின் அவனிடமிருந்து விலக முயற்சித்தாள்… அவளின் விலகல் அவனுக்கு உறைத்தது…. அவள் வேறொருத்தனுக்கு சொந்தமானவள் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை கொஞ்சமும்… தனக்கானவள் என்ற எண்ணமே மேலோங்க அவளை விட மறுத்தான்….

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்….”

“வேண்டாம்….”

“விடுங்க…..”

“விட முடியாது…”

“ஏன்?...”

“பயமாயிருக்குடீ….”

“ஏன்?...”

“நீ என்னைவிட்டு போயிடுவியோன்னு….” என்றவன் அவளை நேராக பார்த்தான்…

அவன் கண்கள் கலங்கியிருந்தது…. அவனின் முகத்தை கையிலேந்தியவள்….

“என்னாச்சு…. என் கண்ணனுக்கு இன்னைக்கு….?... எப்பவும் எங்கிட்ட பேசணும்னு துடிப்பார்… இன்னைக்கு நானே பேசணும்னு சொல்றேன்… ஏன் வேண்டாம்னு சொல்லுறார்ன்னு தெரியலையே… ஏன் என்னை என் கண்ணனுக்குப் பிடிக்கலையா?....” என்று அவன் கண்களைப் பார்த்து கேட்டாள் அவள்…

அவன் பதில் சொல்லாது அவள் முகத்தை கையிலேந்தி,

“உன் மேல உயிரே வச்சிருக்கேண்டி…. உன்னைப் பிடிக்கலைன்னா என்னை எனக்கே பிடிக்காதுடா…”

“அப்புறம் ஏன் இப்படி எதையோ இழந்த மாதிரி இருக்கீங்க?...”

“இல்லை… உன்கூட வேலைப் பார்ப்பாங்கள்ள, ஒருத்தங்க…. அவங்க வந்து சொன்ன விஷயம் தான்….” என்று தொண்டை கமற கூறினான்…

“என்ன சொன்னா அவ?...”

அவள் சொன்னதை ஒரு பெருமூச்சோடு சொன்னவன், “என்னை விட்டு போயிட மாட்டல்ல மயூ….?.....” என்று ஏக்கமும் தவிப்புமாக கேட்டான்…

அவளுக்கு சாகரியின் விளையாட்டை நினைத்து சிரிப்பாக வந்தது… அவள் சிரிப்பதைக் கண்டவன், கேள்வியாய் அவளைப் பார்க்க…

“சரியான லூசு நீங்க…. அவ சொன்னது உண்மைன்னா… நான் உங்க கிட்ட இப்படி நின்னு பேசிட்டிருப்பேனா?... ஹ்ம்ம்…” என்று அவர்களின் நெருக்கத்தை சுட்டிக்காட்டினாள் அவள்….

அவனுக்கும் அப்போது தான் அது உறைத்தது…. அவள் வந்தது முதல் தன் அணைப்பை ரசித்து அதனுள் அடங்கி இருக்கிறாள் என்பது….

“மயூ……….. அப்போ….?...”

“ஹ்ம்… உண்மைதான்…. “ என்றபடி அவனை விட்டு விலகினாள்…

அவனும் அவளை விலக்கினான்….

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே….

சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே…” என்று அவனைப் பார்த்து பாடினாள்…

சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது…” என்று அவனும் அவளுக்கு உறைக்கும்படி கூறினான்….

“நான் இனி என்னைக்கும் மயூரி-முகிலன் தான்….” என்று சொல்லிவிட்டு கைகளில் முகம் புதைத்துக்கொண்டாள்…

ஒரு கூடை பூவை அள்ளி தன் எதிரே நிற்பவள் தன் தலையில் கொட்டியது போல் உணர்ந்தான் முகிலன்…. சந்தோஷம், கண்ணீர், அடக்க முடியாத காதல், வெளி வராத வார்த்தையுடன் இருந்தான் அவன்….

அவளின் கைகளை மெல்ல விலக்கியவன், அவளை கண் திறந்து பார்க்கும்படி கூற, அவள் மறுத்தாள்…

“மயூ…. என்னைப் பாரு…. மயூ….”

“…..”

“மயூ…. உன் முகிலன் சொல்லுறேன்…. பாரு….” என்றதும் அவனைப் பார்த்தாள்….

“என் மயூ…” என்று உருகியவன்,  “வித் யுவர் பர்மிஷன்…” என்றபடி அவளைப் பார்த்தான்….

அவன் எதற்கு பர்மிஷன் கேட்கிறான் என்று யோசிக்கையிலே அவன் சட்டென்று அவளை இழுத்து அணைத்து அவளின் இதழில் இதழ் பதித்தான்….

மயக்கத்தில் இருவரும் மூழ்கிப் போக, இனிமையான காதல் நதி அவர்களை முத்தங்களோடு வரவேற்றது… அவர்களும் அதில் இனிதே தங்களது பயணத்தை தொடங்கினர்…

“ஹேய்…. என்னடி…. காலையிலிருந்தே இப்படியே இருக்குற?...”

“……”

“ஏண்டி…. பேய் பிசாசு எதும் பிடிச்சுட்டா உனக்கு?...”

“…..”

“அடியே… நானும் ஒரு மணி நேரமா கேட்குறேன்…. எனக்கு பசிக்குது… இப்படி இந்த நைட் நேரத்துல என்ன சாப்பிட விடாம என் கையை பிடிச்சிகிட்டு இருக்குற?... கேட்டா ஒன்னும் சொல்லமாட்டிக்குற?... பதில் சொல்லுடி….” என்று அழாத குறையாக கேட்டாள் சாகரி….

மயூரியோ, அவனின் முத்தத்தில் தன்னிலை மறந்துவிட்டிருந்தாள்…. அதை எண்ணியவளுக்கு வெட்கமும், உடனே கோபமும் வந்தது… அதை முகத்தில் பிரதிபலிக்கவும் செய்தாள்…

அதை கண்ட மயூரிக்கு காதல் படுத்தும்பாடு போல என்று தோன்றியது…. சிரித்துக்கொண்டே, “ஹேய்… மயூரி…. அங்கே பாரு…. முகிலன் சார்….” என்றதும் அவள் கையை விட்டு விட்டு, அறைக்குள் சென்று அங்கிருந்து மறைந்திருந்து அவனைத் தேடினாள்…

அதைப் பார்த்த சாகரிக்கு சிரிப்பு தாங்கவில்லை… சோபாவில் விழுந்து விழுந்து சிரித்தாள்…. கோபம் தலைக்கேற, சாகரியை நாலு அடி போட்டாள் மயூரி

“ஏண்டி… எருமை மாடே… உன் விளையாட்டுக்கு வர வர அளவே இல்லாம போச்சு…. அவர்கிட்ட ஏண்டி அப்படி சொன்ன?....?...”

“பின்ன வேற என்ன செய்ய சொல்லுற?... நான் அப்படி சொன்னதால தான் இன்னைக்கே உன் காதல் கை கூடியிருக்கு… மேடமும்… ஏதோ கனவுல மிதக்குறீங்க…. வெட்கப்படறீங்க… சிரிக்குறீங்க…. கோபமும் படறீங்க… ஹ்ம்ம்… ஏதோ… நடந்துருக்குன்னு தெரியுது… பட் என்னன்னு தான் புரியலை…. சரி எதுவா இருந்தா என்ன….நீ ஹேப்பின்னா நானும் ஹேப்பி தான் என் செல்ல மயில்… ஹ்ம்ம்….”

“நீயும் காதலிப்படீ… அப்போ உனக்கு புரியும்….” என்றபடி சென்றுவிட்டாள் மயூரி…

காதலிப்பாய் என்று சொன்னதும், சாகரிக்கு ஆதர்ஷின் நினைவு…. “என்ன பண்ணுறீங்க ராம்?... எங்கே இருக்கீங்க?.... இன்னும் 6 நாள் இருக்கே உங்களைப் பார்க்க?... ஹ்ம்ம் நான் என்ன செய்ய?...” என்றவளுக்கு சட்டென்று அந்த ஐடியா தோன்ற… சந்தோஷத்துடன் தனது அறைக்குச்சென்றாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.