அதனை அவன் நன்கு அறிவான்
"அப்போ நான் பேசினது உனக்கு பிடிக்கலையா? என்னடா செய்கையில இறங்காமல் பேசக் கொண்டிருக்கிறாய் என்று சொல்ல வருகிறாயா செல்லம்"
என்று சொன்னவன் அவள் வாய் திறந்து பேசும் முன் ஆயிரம் இல்லா விட்டாலும் ஒரு பத்து பதினைந்து முத்தங்களை அள்ளி வீசி விட்டு "இப்ப இது போதும் வந்து நேர்ல நிறைய கொடுக்கிறேன் பாய் பொண்டாட்டி" என்று சொல்லி போனை அணைத்து விட்டான்.
எதிர் பாராமல் கிடைத்த முத்தத்தால் அவள் உடலில் மின்சாரம் ஓடிப் பரவியதை போல் உணர்ந்தால் உடல் எங்கும் புதிய இரத்தம் ஓடியது .அவள் குங்குமமாய் சிவந்து போனாள். அவள் காதிலிருந்து போனை அகற்றாமல் அந்த இன்ப அதிர்ச்சியை அனுபவித்தாள்.
தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்த பின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
"ஏன் மாப்பிள்ளை நீங்க ஊருக்கு போகும் பொது வர்ஷு குட்டியை இங்க விட்டிட்டு போகலாமே அதுக்கு இவளவு தஊரம் ஈன யோசிக்கிறீங்க?
"இல்ல அத்தை எதுக்கு உங்களுக்கு வெண் சிரமம் அவல நீங்க சமாளிக்க மாட்டீங்க?"
"நீங்க மட்டும் அவல சமாளிப்பீங்களா? அவளுக்கு ஆரபி இருந்தால் போதும் சமத்தாய் இருப்பா? என்ன குட்டி அப்பா ஊருக்கு போய்ட்டு வரட்டும் நீங்க ஆரபி சித்தியோட இருக்கீங்களா?"
"ஐ ... யாளி யது நீ போ நான் ஆரு கூட இருக்கேன் என்றால் மழலை"
"அப்பாவை இப்பிடியா பெயர் சொல்லி கூப்பிடுறது வர்ஷு " என்று அதட்டினார் தேவிகா.
எங்கத்தான் போகப் போறீங்க? என்று கேட்டபடி அவர்களை நாடி வந்தாள் ஆரபி
அபோது தான் அவளை திரும்பி பார்த்த மூவரும் பேச்சிழந்தனர்.
"ஆரு நீ ரொம்ப அழகாய் இருக்கே " என்றால் வர்ச்ஷினி
"தாங்க்யூ குட்டி " என்று மழலையின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
சிறியவள் அழகாய் கிளுங்கிஸ் சிரித்தாள்
தாய் அருகில் வந்து அவள் கன்னத்தில் திருஷ்டி வழித்தால்
"என் கண்ணே பட்டிடும் போல இருக்கு கோவில்ல இருந்து வந்ததும் உனக்கு திருஷ்டி சுத்தி போடணும்." என்று மகளின் அழகை எண்ணி பெருமிதத்துடன் சொன்னால் தாய்.
"சரியாய் சொன்னீங்க அத்தை... இவ்வளவு நாளும் ஆரபிய சின்ன பொண்ணு என்று நினைத்துக் கொண்டிருந்தோம் இப்ப புடவையில பார்த்ததும் தான் அவ எவ்வளவு வளந்திட்டா என்று தெரியுது . அவளுக்கு இப்பவே மாப்பிளைய தேட ஆரம்பிச்சிடணும் அத்தை.
"ம்... சரியாய் சொன்னீங்க மாப்பிள்ள நானும் இதப் பத்தி இப்ப தான் யோசிச்சேன் அதுக்குள்ளே நீங்க சொல்லிட்டீங்க"
"ஆரு முகத்தில் லேசாக கலவரம் குடி கொண்டது
இதென்னட வம்பா போச்சு இப்பிடி தரிந்திருந்தால் சல்வாரையே போட்டிடுப்பீனே எப்பிடி என்னோட காதல் விவசாயத்தை வீட்டில சொல்றதென்று தெரியலையே... சரி க்ரிஷ் வரட்டும் அவரோட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்." என்று நினைத்தவள் அதன் பின் சகஜமானாள்.
"பாவம் அவள் இன்று அவளோடு போனில் உரையாடியது தான் அவர்களிருவருக்குமான இறுதியான நல்லிணக்கமான உரையாடல் என்று அவளுக்கு தெரியாது.
"என்னம்மா கோவிலுக்கு போகலாமா?"
"ஆங் ... ஒரு நிமிஷம்மா அப்பாவ பாத்திட்டு வந்திடுறன் என்று சொல்லி தன்நிலை மீண்டு தந்தையை நாடிஸ் சென்றாள்."
அது வரை தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு துணி கொண்டு துடித்தது போல் காணாமல் போனது
தொடரும்!
{kunena_discuss:755}