வானில் மேகங்களிடையே மறைந்து மறைந்து சென்று கடைசியாக நிலவின் அருகே வந்த அந்த அழகான ஒற்றை நட்சத்திரம் இரவின் போர்வையில் இதமாக தூங்க முயல… அதை ரசித்தபடி அமர்ந்திருந்த யுவியின் அருகே வந்தமர்ந்தார் துர்காதேவி…
“தேவிம்மா… நீ தூங்கலையா?... இவ்வளவு நேரம் ஏன் முழிச்சிட்டு இருக்குற?... வா போகலாம்..” என்றபடி தாயை எழுப்ப முயன்றவன்,
அவர் மாட்டேன் என்பது போல் தலை அசைக்கவும்,
“அடம் பண்ணாத தேவிம்மா… வா…” என மறுபடியும் அழைத்தான் யுவி…
“நீ மட்டும் இவ்வளவு நேரம் முழிச்சிருந்து நட்சத்திரத்தை ரசிப்பன்னு அடம்பிடிப்ப… நான் மட்டும் அடம் பிடிக்கக்கூடாதாடா வேலா?...” என கேட்க…
அதற்கு அவன் புன்னகை மட்டுமே பதிலாய்…
“நீ சின்ன வயசில கூட நிலா, நட்சத்திரம் பார்த்து ரசிச்சதில்லை வேலா… ஆனா, இப்போ இந்த 8 வருஷமா நீ அந்த நட்சத்திரத்தை ரொம்ப ரசிக்குற வேலா… காரணம் கேட்டா, எல்லாரும் இருள்னா பயப்படுவாங்க… ஆனா, இந்த நட்சத்திரம் மட்டும் இருளோட அரவணைப்பில் நல்லா தூங்குதுன்னு சொல்லுற… என்னடா இதெல்லாம்…” என்று கேட்ட தாயின் மடியில் படுத்துக்கொண்டவன்,
“அது மத்தவங்களுக்கு தெரியாதுதான்… உனக்கும் தெரியாதா தேவிம்மா…” என அவர் விழி பார்த்து கேட்க…
இப்போது மௌனம் அவரிடத்தில்…
“நீ… மூர்த்திப்பா, துணாம்மா… தம்பிங்க… எல்லாரும் எனக்கு இருக்கீங்க… இதோ இப்படி நான் நினைச்ச நேரத்துல எல்லாம் என் தேவிம்மா மடியில் தலை வைச்சு படுத்துப்பேன்… அப்புறம் இப்படி விரல் பிடிச்சு விளையாடுவேன்…. இது போதுமே மா எனக்கு…” என்றவன் தாயின் விரல்களைப் பிடித்துக்கொண்டே…
“நான் டைம் கேட்டதும் நீ குடுத்துட்டம்மா… ஆனா, என்னால… முடியலைம்மா…” என்றவனுக்கு நிஜமாகவே சொல்ல வார்த்தை வராது தவித்தது தொண்டைக்குள்…
பின், தாயிடம், “நான் இப்படியே இருந்துடுறேன் மா… உனக்கு மகனா மட்டும்…” என்ற யுவியிடத்தில் எதுவும் சொல்லவில்லை தேவி… ஆனால், என்ன செய்யவேண்டுமென்று முடிவெடுத்துக்கொண்டார் அவர் மனதினுள்…
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
அடுத்து என்ன நடக்கும்னு யோசிச்சிட்டே இருங்க…
நான் மறுபடியும் உங்களை அடுத்தவாரம் மீட் பண்ணுறேன்… டாட்டா…
வரம் தொடரும்…
{kunena_discuss:866}