தூரத்தில் நீ நிற்கும் வேளையில்
உன் பெயரை உரக்க அழைத்தப்படி
உன்னிடம் ஓடி வந்து வேகமாய் அணைத்துகொள்ள
ஆசைதான் எனக்கும்
நமது திருமணத்திற்கு
அடுக்கடுக்காய் தடை வந்து
ஒவ்வொன்றையும் நீ தகற்ற மாங்கல்யத்தை உன் கரங்களால் பெற்றிட
ஆசைதான் எனக்கும்
முதல் ஐந்து மாதங்கள்
வேறுலகம் மறந்து உன்னை
என்னோடு கடத்தி சென்றிட
ஆசைதான் எனக்கும்
கணவன் ஆகிய உன்னை
தகப்பன் என்ற ஸ்தானத்திற்கு
உவகையுடன் அழைத்து சென்றிட
ஆசைதான் எனக்கும்
மகன் வேண்டும் என்ற கனவை மறந்து
உனக்காகவே மகள் பிறக்க வேண்டும்
என்று இறைவனிடம் வேண்டிட
ஆசைதான் எனக்கும்
என் பிரசவ வலியின் வேதனையை
நீ உணரகூடாது என்று
என் வலிகளை மௌனமாய் பொறுத்து கொள்ள
ஆசைதான் எனக்கும்
உன் வலது மார்பில் சாய்ந்திருக்கும்
நமது மகளை செல்லமாய் முறைத்துக்கொண்டே
உன் இடது மார்பில் ஒன்றிட
ஆசைதான் எனக்கும்
மகளா கணவனா
என்ற நிலைவரும்போது
உன்னை நிலைகுலைய செய்யாமல் உன் பக்கம் நின்றிட
ஆசைதான் எனக்கும்
உன் அறுபது வயது
வாலிப குறும்புகளை செல்லமாய் கடிந்துகொண்டே
செவிகளை திருகிட
ஆசைதான் எனக்கும்
நாம் திருமண புதிதில் தனித்து இருந்தது போல
இறுதி ஆயுட்காலத்தை
தனியொரு இடத்தில் கழித்துவிட
ஆசைதான் எனக்கும்
நான் இறந்து நீ கண்ணீர் விடாமல்
நீ இறந்து நான் கண்ணீர் விடாமல்
இருவருமே ஒருவரின் அணைப்பில் ஒருவர் அடங்கி உயிர் மாய்த்திட
ஆசைதான் எனக்கும்
சொர்கமோ நரகமோ
நீ தள்ளாடாமல்
நேராய் நடப்பதற்கு என் தோள்களை பற்றிட
ஆசைதான் எனக்கும்
இனி எத்தனை ஜென்மம் கொண்டாலும்
நான் உன்னவளாய்
உனக்காக மட்டுமே வாழ்ந்திட
இதழில் மறையாத புன்னகையுடன் அமர்ந்து இருந்தாள் சங்கமித்ரா .. கண்களாலே அவள் நடத்தி கொண்டிருந்த வேள்வியை தனது தொலைப்பேசியின் மூலமாய் கலைத்தான் ஷக்தி ..
" ஷக்தீதீஈஈ மாமா " என்று கொஞ்சலாய் அழைத்தாள் சங்கமித்ரா .. அவனோ வழக்கம் போலவே
" ம்ம்ம் " என்று பேச்சினை தொடங்கி அவளை சீண்டி பார்க்க நினைத்தான் .. இதற்கெல்லாம் அசருபவளா அவள் ..
" என்ன பண்ணுற மாமா ?" என்று அடுத்த கேள்விக்கு தாவினாள் ..
" சைட் அடிச்சிட்டு இருக்கேன் டீ " என்றான் அவர்களது புகைப்படத்தை பார்த்து கொண்டே ..
" பாருடா , நீ இதெல்லாம் கூட செய்வியா டா ? நீ ஒரு சாமியார்ன்னு உலகம் நம்புதே !"
" ஆஹான் ..நம்பட்டும் ..அதானே வேணும் "
" எதுக்காம் ?"
" எதுக்கோ !"
" ஆரம்பிச்சுட்டியா ஒரு வார்த்தையில் பதில் சொல்றதுக்கு "
" ஹா ஹா "
" தயவு செஞ்சு சிரிக்காதே "
" ம்ம்ம் ஓகே "
" சாப்பிட்டியா ?"
" ம்ம்ம்"
" நான் சாப்டேனான்னு கேட்க மாட்டியா ?"
" தெரியும் "
" என்ன தெரியும் மாமா ?"
" என்கிட்ட பேசின பிறகுதான் நீ சாப்பிட போவன்னு தெரியும் .."
வியந்து போய் சுற்றியும் முற்றியும் பார்த்து வைத்தாள் மித்ரா ..
" ஹே இதென்ன சீட்டிங் ? என்னை நீ வாட்ச் பண்ணுறியா ?"
" ஹா ஹா இருக்கலாம் டீ அத்தை பொண்ணு " என்று உல்லாசமாய் சிரித்தான் ஷக்தி ..
" ஐ மிஸ் யூ டா "
" ம்ம் தெரியும் "
" ச்சி போ .. மிஸ் யூ டூ சொன்னா , முத்து கொட்டிடுமோ ?"
" ம்ம்ம்ம் ஆமா டீ " என்றவனுக்கு அதற்கு மேல் அவளை சோதிக்க மனம் வரவில்லை .. எனவே கொஞ்சம் இயல்பாக பேச தொடங்கினான் ..
" சரி சொல்லு, என்ன பண்ணுற ?"
"சும்மா டைரி எழுதறேன் .. நீதானே ஏதாச்சும் நல்ல டைலாக் கிடைச்சா எழுதி கொடுடி ன்னு சொன்ன "
" ஹே ஆமா ..குட் குட் "
" போடா "
" சரி என்ன டின்னர் ?"
" ம்ம் காவியா உப்புமா செய்து வெச்சா " என்றவள் வெற்றிகரமாய் தான் அவளுடன் இருப்பதை உளறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் .. இந்த நான்கு நாட்களும் அவள் சென்னை இருப்பதை அவனிடம் சொல்லாமல் மறைத்து தான் வைத்திருந்தாள் .. இப்போது அதை செவ்வனே அவனிடம் சொல்லிவிட்டு உதடுகளை கடித்து கொண்டு மானசீகமாய் தன்னை திட்டி கொண்டாள் ..