அவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்று பெண்களுக்கு முக்கிய இடம். அதில் இருவர் இப்போது அவன் வாழ்வில் இல்லை.
“நீ எனக்கு தகுதியில்லை.” என்று ஒருத்தியை ஒதுக்கிவைத்தான். அவளின் முகம் கண்முன்னே வந்து அவனை வருத்தியது. பின்பு தன் தவறு உணர்ந்து அவளிடத்தில் சென்று மன்னிப்பும் கேட்டுவிட்டான். அவளும் பெருந்தன்மையானவள். மன்னித்துவிட்டாள். ஆனால் ஒருவனை கழுத்தை அறுத்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டால் அது சரியாகுமா? அதுபோல்தான் அவளின் வாழ்வு திசை மாறிப் போவதற்கு தானும் ஒரு காரணம் என்று அவனுக்கு உறுத்துகிறது.
“நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை.” என்று மற்றவள் மருகி ஒதுங்கி உலகைவிட்டே போய்விட்டாள்.
அவன் கண்கள் அந்தப் புகைப்படத்துக்குச் சென்று அங்கே நிலைத்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
று தோன்றியது.
‘அவள் ஒத்துக்கொள்வாளா? நடந்தது அனைத்தையும் மறந்து என்னிடம் அவள் நட்பு பாராட்டுவதே பெரிய விசயம். இந்த நேரத்தில் அனைவரிடமும் மறுக்கும் ஒரு விசயத்தை எனக்காக செய்வாளா?’
எவ்வளவு யோசித்தும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை. நாளையே அவளை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்