இப்போதெல்லாம் அவளிடம் காதல் பார்வை இல்லையென்றாலும் முன்பு போல் இருவருக்கும் இடையில் கார சார சண்டை இல்லை ....அவன் இவளை நினைத்து உருகி நெருங்க நினைக்க இவளோ தினமும் சரணை புகைப்படத்தில் பார்த்து கொண்டு அண்ணா என் மனசு தடம் மாற நினைக்குற ஒவ்வொரு நிமிஷமும் நீங்க தான் அத கட்டுபடுத்துற சக்திய எனக்கு கொடுக்கணும் நான் வந்த வேலை கூடிய சீக்கிரம் முடிஞ்சிடும்ன்னு நம்புறேன் நல்லபடியா முடிச்சு என்னை வெளிய அனுப்பி வெச்சிடுங்க ...என்ற வேண்டுதலுடன் உறங்க சென்றாள்...
இன்னும் அவள் மனசாட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததில் அது போட்ட துண்டை எடுத்துவிட்டு அவளுக்கான பாதையை காட்டி கொண்டிருந்தது..
மறுநாள் ஆரம்பித்தது ட்ரைவிங் கிளாஸ் சிறு சிறு சீண்டல், தீண்டல்களுடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
திங்கக்கிழமை நான் கோயிலுக்கு போனும் பாட்டி ...இப்ப எப்படி போறது ....?
என்னம்மா நடந்து போனா 15 நிமிஷம் அதுக்கு எதுக்கு இப்படி சலிச்சுக்குற ...
இல்ல பாட்டி இந்த தாலி செயின் அதான் பயமா இருக்கு...
ஏதோ ஒரு தடவ அப்படி ஆச்சுன்னு ...சரி வாமா..நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்