"நான் காதலிக்கிற பொண்ணு நீ தானே... அப்போ என் வாழ்க்கையில் உனக்கு மட்டும் தான் இடமிருக்கு...
நீ எதப் பத்தியும் நினைச்சு கவலைப்படாம அம்மா, அப்பாக் கூட ஜாலியா இருந்துட்டு வா... எனக்கு ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சு நான் வரேன்"
சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
அவன் என்ன சொல்லியும் அவள் மனம் கேட்கவில்லை... அம்மா, அப்பாவிடம் பேசி எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து ஊருக்கு செல்ல தயாரானாள்.
ஆனால் அவள் பயந்தது போல் இந்த காதல்... திருமணத்தில் முடியப்போவதில்லை என்றோ... பிருத்வியின் வாழ்க்கையில் இருக்கப் போகும் அந்த ஒரே ஒருத்தி இவள் இல்லை என்றோ அப்போது சப்னாவிற்கு தெரியவில்லை.
மறதி என்ற ஒன்று தான் சிலரது வாழ்க்கையை வழி நடத்துகிறது, என்னத்தான் சந்தோஷமான நிகழ்வுகள் பொக்கிஷமாக.... சோகமான நினைவுகள் வடுவாக....நம் மனதில் இருந்தாலும் அதை அப்போதைக்கு மறந்திருந்தால் தான் நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும்.
You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story
ஆனால் சிறு வயது நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் யுக்தா... அவள் பிருத்வியின் நினைவில் இப்போது இவள் இல்லை என்பதையும் அவன் மனதில் வேறொருத்திக்கு இடம் கொடுத்திருக்கிறான் என்பதையும் அறிந்தால் அவள் என்ன ஆவாள்...???
யுக்தா தேவாவிற்கு திருமணம் ஆகப் போகிறது என்று தெரிந்தும் ஒரு தலையாக தேவாவை காதலிக்கும் சங்கவிக்கு யுக்தாவின் காதலைப் பற்றி தெரிந்தால் சந்தோஷப்படுவாளா...???
உடன் பிறந்தவர்களுக்கு இடையிலேயே ஒரு கட்டத்திற்கு மேல் பிரிவினை வந்துவிடும் இந்த காலத்தில்... நாடு விட்டு நாடு பிரிந்திருக்கும் இந்த சகோதரிகளுக்கிடையே இந்த பாசப்பிணைப்பு உருவானது எப்படி..???
அவர்கள் மனதில் இந்த காதல் உருவானதும் தான் எப்படி...???
தொடரும்
{kunena_discuss:933}