இன்னும் கூட அவள் திங்கட்கிழமை வேண்டுதலை கை விட்டுவிடவில்லை ...அது தான் அவளை காக்க போகிறதோ ...ஆனால் அவள் என்ன வேண்டுதலை முன் வைத்திருக்கிறாள் ...சிறு வயது முதல் இப்போது வரை .....?
முத்து நம்ம சங்கரும் உமாவும் வந்திருக்காங்கடா எதாச்சும் குடிக்க எடுத்துட்டுவாடா சோம்பேறி பயலே என்று தாத்தா கத்தும் போதே முத்து கையில் தேநீருடன் நின்றிருந்தான்.
ஏன் தாத்தா இவ்வளவு கோவம். அவர்தான் எங்கள பார்த்த உடனே டீ போட போயிட்டாரே? உமா கேட்க
அட நீங்க வேறம்மா கோவம் என் மேல இல்ல?
பின்ன வேற யாரு மேல? சங்கர் கேட்டான்
அதுவா கோவம் என்று முத்து ஆரம்பிக்கும் முன் டேய் போடா போயி எனக்கு மோர் கொண்டு வா தாகமா இருக்கு என்ற படி முத்துவை விரட்ட முனகிய படி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ொம்ப அழகா இருக்க என்று பாட்டி நெட்டி முறிக்க உமா நெகிழ்வுடன் பரவாயில்லையே பாட்டி என் பேர் உங்களுக்கு நினைவிருக்கே என்றாள்.
நினைவில்லாம என்ன அதான் ஒரு நாளைக்கு ஒரு பத்து தடவயாச்சும் உன்ன பத்தியும் சங்கர பத்தியும் சொல்லலன்னா இவளுக்கு தூக்கம் வராதே என்று மனோவை இடித்துக்காட்டினாள் ஜெயா…