சரணுக்கு சங்கரின் மேல் கோபம் கொப்பளித்து கொண்டு வந்தது அவனால் அவன் நண்பனின் நிலையை காணவும் முடியவில்லை அதை எடுத்து சொல்லவும் வழியில்லை இதற்கு அந்த நரக வேதனையே தேவலாம் ...இப்போது நான் உயிரோடு இருந்திருந்தால் ஆதியை இப்படி ஒரு பிரச்சனை நெருங்க விட்டிருப்பேனா ...?
நான் இறந்து எத்தனை பேரை உயிரோடு புதைத்து கொண்டிருக்கிறேன் துடியாய் துடித்தது சரண் ஆத்மா ...சாரி ஆதி எல்லாம் என்னால ..என்னை மன்னிச்சிடு அழுதான் சரண் ...அவனையும் அழ வைத்தது இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ..
ஆதி சரியாக கணித்திருந்தான் சங்கரை… ஆதியா மனோவா என்று வரும்போது அவன் மனம் நிச்சயம் மனோவிடம் தான் சாயும் என்று .....
ஆனால் அது இப்படி வெறித்தனமாய், அபாண்டமாய் தன் மீது கண் மூடித்தனமாய் அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றவாளி கூண்டில் ஏத்தி தன் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தது.
அவனுக்கு எதிராய் சாட்சி சொல்ல போகிறவர்கள் முதல் சாட்சி அவன் ஆருயிர் காதலி கம் மனைவி திருமதி மனோகரி ஆதித்யன் ....இரண்டாம் சாட்சி சிறு பிள்ளை முதல் தன்னுடன் வளர்ந்து தன்னை அறிந்த தன் ஆருயிர் நண்பன் திரு சங்கர்...எந்த கோர்ட்..?