யாரு ..? எப்படி ...? கேட்டான் சங்கர்
கண்களை மூடி தலை கவிழ்ந்து இருந்தான் ஆதி.
உன்ட்ட தான்டா கேக்குறேன் யார் காரணம் ...?
....................
அவன் மௌனம் சங்கருக்கு நடுக்கத்தை கொடுத்தது..அப்படியென்றால் அவன் மானு பெண் அந்த கொடூரத்தை ஆண்டவா.. தடுமாறியது அவன் குரல்.... டேய் .....ஆ....தி.... யாராச்சும் அவள ரே ...
அது என் குழந்தை என்றான் அவசரமாக அதே சமயம் அவன் தலையும் கவிழ்ந்து தான் இருந்தது அவன் செய்த அந்த செயலுக்காக இல்லை..தன் திருமணத்தை தன் நண்பனிடமிருந்து மறைக்க நினைத்த அவன் பயித்தியகாரத் தனத்திற்காக...
நிச்சயம் இவனுக்கு நம்ப முடியா அதிர்ச்சியாய் இருந்தாலும் சங்கருக்கு தன்னை பற்றி தெரியும்.
இப்போது என் தலை
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் கேட்டியா நீ ..?
அவ என் பொறுப்புல இருக்க பொண்ணு ...என்னை எப்படிடா மறந்த நீ ..? இவ்வளோ கேவலமானவனா டா நீ ...நீ எப்படி டா தாத்தாக்கு பேரனா இருக்க ..? என்று அவன் அடிக்குரலில் கர்ஜிக்க
ஆதியை பார்த்து கனவிலும் கூட கேட்டிடாத கேள்வியை தன் மானு பொண்ணுவின் நிலை கேட்க வைத்தது ..