இல்ல…..முகத்தை திமிராய் வைத்து கொண்டான் சங்கர் ...அனைவரிடம் இருந்தும் இவன் தப்பிக்க இன்னும் நாடகத்தை தொடர சொல்கின்றான் என்ன ஒரு சுயநலம் தாத்தாவிற்கு என இவ்வளவு தூரம் வந்த பின் கூட இப்படி நடந்து கொள்கிறான் ...என்ற கோபம் சங்கரை ஆட்டி படைத்தது ..பேசாமல் தாத்தாவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு மனோகரியை அழைத்து கொண்டு சென்று விடலாமா என்று முதலில் யோசித்தவன் தாத்தாவை காணும் தைரியம் இல்லாததில் அந்த எண்ணத்தை கை விட்டான் ...
இப்போது மனோ இப்படி இருப்பதால் உண்மை தெரிகிறது ...இல்லையெனில் இன்னும் கொஞ்ச நாள் கழித்து அவளை அனுப்பி இருப்பான் தானே பணத்தை கொடுத்து ச்சே .. வெறி இன்னும் ஏறியது சங்கருக்கு
மனோ சொன்ன மாறி அபார்ட் பண்ணிடலாம் ...அது தான் சரி சொல்லி முடிக்கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அவள் ..துடித்தான் சங்கர் ..எதையும் பொருட்படுத்தாமல் அவளிடம் சென்று கை நீட்டினான் அவன்.. அதை தட்டி விட்டாள் அவள் ..
அப்படியே உன்னை பிடிச்சு நானே தள்ளி விட்டுடுவேன் என் குழந்தைக்காக பாக்கறேன் வாடி என்றபடி அவளை தூக்கி கொண்டு மொட்டை மாடியில் இருந்த ஊஞ்சல் அருகே சென்று இறக்கி விட்டான்…