அவள் கண்கள் சொல்லவா வேண்டும் குளம் தான்..
சொல்ல வேண்டியது தானடி உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்ன்னு சொல்லி தொலைக்க வேண்டியது தான ...
என்ன சம்மந்தம் இருக்கு ..? டீல் தவிர ..வேறென்ன இருக்கு அத சொல்லி தான இவ்வளோ தூரம் ...
வார்த்தைகள் தெளிவாக வரவில்லை ..நடுக்கம் கொண்டன அழுகையின் காரணம் என்று சொல்ல வேண்டுமா நிச்சயம் இல்லை அவள் சொல்வது பொய் என்பதை ஆதி அறிவான் ...
இந்த திமிர் தான்டி இதே திமிர் தான்... இது தான்... இதுக்கு எல்லாமே காரணம் இது மட்டும்தான் ....
ஏண்டி டீல் மட்டும் தான் இருக்காடி ...நம்ம ரெண்டுபேருக்குள்ள அது மட்டும் தான்
இருக்கா ...?
ஆமா அது மட்டும் தான் இருக்கு வெறித்து பார்த்தாள் மனோகரி வார்த்தையில
...
This story is now available on Chillzee KiMo.
...
கெல்லாம் பயந்து உன்னை விட்டுடுவேன்னு மட்டும் நினச்சிடாத..கீழ போலாம் வா என்று அவள் தோளை தொட அதை தட்டிவிட்டு ஊஞ்சலில் அமர்ந்து அழுதாள் மனோகரி...
என்ன செய்வது என்று புரியாமல் சற்று நேரம் நடந்து விட்டு மீண்டுமாய் அவளிடம் வந்தவன் அவள் மேல் பரிதாபப்பட்டான் இன்னும் எவ்வளோ நேரம் மனோ அழ போற…?