இப்படித்தான் அவ எத சொல்லியும் கேட்காம இவன் இஷ்டத்துக்கு அவளை அடக்கி ஜெயிச்சி இருக்கான் என்று கால் நடுங்க நுனியில் நின்றிருந்தவளை ஆதி காப்பாற்றியதை கூட கன கச்சிதமாக தவறாய் பதித்தான் சங்கர்.
அவன் தோளில் கை வைத்து அவன் கண்களை உற்று நோக்கி விழி தாழ்த்தியவளிடம் கூறினான் ... ஆதி …கொஞ்சம் எத பேசுறதா இருந்தாலும் பாதியில மயக்கம் போடாம பேசுமா என்று ...
இங்க பாருங்க சங்கர் சார் என் டீல் முடியுற வரைக்கும் இந்த குழந்தைய பெத்து கொடுக்கிற வரைக்கும் .. தயவு செஞ்சு என்னை பார்க்க இல்ல என்னை பத்தி யோசிக்க கூட வேண்டாம் நீங்க போங்க ...என்று அவள் சொல்ல
டேய் இது என்னடா கொடுமை ...என்னடா நினச்சிட்டு இருக்க நீ ..பாவி நீ என்னதாண்டா பிளான் பண்ணி வெச்சிருக்க ...
...
This story is now available on Chillzee KiMo.
...
இதெல்லாம் யாராலடி ..எல்லாம் உன்னால ...உன் ஒருத்தியால ..மக்கு, மட சாம்பிராணி.
உன் திமிரால மனோ ...உன் திமிர் மட்டும் தான் இது எல்லாத்துக்கும் காரணம். என்னிக்கு உன்னை முதல் முதலா பார்த்தேனோ அன்னிக்கு புடிச்ச சனி இன்னும் என்னன்ன பண்ண போகுதோ ...? யார் யார் என்னை விட்டுட்டு போக போறாங்களோ..?