எழுந்திரு வா போலாம் என்று அவளை எழுப்ப அவள் மறுக்க ..வான்னு சொல்றேன் இல்ல என்று இழுத்து அணைக்க அதை வெறுத்து அவள் ஒதுங்க தன் பலத்தில் கால் வாசி உபயோகித்து அவன் பிடியை இறுக்க, அதை ஒதுக்க முடியாமல், ஒதுக்க விரும்பாமல் அவன் நெஞ்சில் சற்று அழுத்தமாய் அவள் முகம் புதைவதை உணர்ந்தான் ஆதி ...
எனக்கு புரியல மனோ நீ என்னதான் நினைக்குறன்னு எனக்கு புரியல...உனக்கு என்ன தான்டி பிரச்சனை ..சற்றே மெல்லிய குரலில் அவன் கேட்க .. அவளுக்கு நிழலாய் தெரிந்தன அவள் அம்மாயி, தனம், கிரிஜா, மாதுரி.. செண்பகம் .மற்றும் ஷீலாவின் முகங்கள்..
இத்தனை நாளில் இத்தனை நேரம் அவனுடன் இவ்வாறு இருந்ததே இல்லை மனோகரி ...அவனுக்கு அது பிடித்திருந்தது ...இப்படி அவளை தினம் தினம் அணைக்க வேண்டும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ணும்னாலும் செய்றேன் ஆண்டவா ...
யோசித்தாள் மனோகரி ...
ஆதி யோசிக்கிறா யோசிக்கிறா விடாத விடாத கவர் பண்ணு கவர் பண்ணு ...
இன்னும் அவள் அருகில் வந்தவன் அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க
அவள் அவனை பார்க்க இது பாப்பாக்காக என்றான்
அவளோ நகத்தை கடிக்க ஆரம்பித்தாள்