பொதுவாக தன் காதலி இல்லை காதலனை வேறொருவரோடு பார்த்தாளோ...இல்லை யார் மூலமாவது கேட்டாளோ... பொறாமை வருவது இயல்பு தான்... ஆனால் சப்னாவிற்கு வந்தது பொறாமை இல்லை... பயம், தான் செய்த தில்லுமுல்லுகளை யுக்தாவும் செய்துவிடுவாளோ என்ற பயம்... இது தான் சப்னாவை நிலைக்கொள்ளாமல் தவிக்க வைக்கிறது. அவள் காதலில் அவளுக்கு நம்பிக்கை இல்லாமலும் போனது...
ஆனால் யுக்தாவிற்கோ அவளின் காதல் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது... பிருத்வியின் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாத போதே... அவள் காதலில் சிறு நம்பிக்கை இருந்தது... இந்த ஒருவாரத்தில் அவனோடு பழகியதிலும்... அவனோடு சேர்ந்து முருகனிடம் வேண்டிக் கொண்டதிலும் அவள் நம்பிக்கை அதிகரித்தது.
ஆனால் அவன் கவியோடு பேசியதை கேட்டபோது... அவள் நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது... அவன் இல்லாத வாழ்க்கையை அவள் இதுவரை நினைத்து பார்த்ததில்லை... அவனின் நினைப்பு தான் அவளுக்கு எப்போதும்...
இப்போது கூட ஒருவாரம் ஊருக்குப் போனாள் அவனை பார்க்க முடியாதே என்று மனதில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்... ஆனால் இப்போது அவளுக்கு இருக்கும் சந்தோஷமே... அவளை அவன் ஞாபகத்தோடு இருக்க வைக்கும்... என்ற நம்பிக்கையில் ஊருக்கு கிளம்ப தயாரானாள்... சப்னா என்ற ஒருத்தி பிருத்வியின் வாழ்க்கையில் இருப்பது தெரியாமலேயே...
லேசா லேசா... நீயில்லாமல் வாழ்வது லேசா...
நேசா நேசா... நீண்டகால உறவிது நேசா...
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே.. விரைவினிலே...
கலர் கலர் கனவுகள் கண்களிலே...
உனக்கெனவே... உலககினிலே... பிறந்தவளே...
லேசா... லேசா... நீயில்லாமல் வாழ்வது லேசா...
நான் தூங்கி நாளாச்சு... நாளெல்லாம் வாளாச்சு...
கொல்லாமல் என்னைக் கொன்று வதைக்கிறதே...
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே...
கண்ணெல்லாம் மன்னன் வண்ணம் தெரிகிறதே... விரிகிறதே ..
தனிமையில் இருக்கையில் எரிகிறதே...
பனி இரவும்... அனல் மழையை பொழிகிறதே....
லேசா லேசா... நீயில்லாமல் வாழ்வது லேசா...
நேசா நேசா நீண்டகால உறவிது... உறவிது...
யுக்தாவின் காதல் அவளுக்கு நம்பிக்கையையும் உறுதியையும் கொடுத்திருக்கிறது... ஆனால் அதே காதல் சில சமயத்தில் பலவீனத்தையும் கொடுக்கும்... யுக்தாவிற்கும் அப்படித்தான் நடக்கப் போகிறதா...??
தொடரும்
{kunena_discuss:933}