(Reading time: 22 - 43 minutes)

மகனை அங்கு எதிர்பார்க்கவில்லை போலும் அவர் முகத்தில் அது அப்படியே தெரிகிறது. அவனது வார்த்தையில் எச்சில் விழுங்கினார் அவர்.

“உங்களுக்கு இங்கென்ன வேலை?” அடுத்த கேள்வி வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் தன் அம்மாவைப் பார்த்து அவனிடமிருந்து. அவன் கேள்வியில் இவளுக்கே குத்தியது என்றால் அவன் அம்மாவிற்கு எப்படி இருக்கும்? அதோடு இவன் இப்படி பேசும் அளவிற்கு என்ன நடந்திருக்க முடியும்?

“உங்க ரெண்டுபேர் மேரேஜைத்தான் பேசி முடிக்கலாம்னு வந்தேன்பா….” அவர் விளக்கம் சொல்லும் குற்றவாளி தொனியில் பதில் சொல்ல

“நீங்க உட்காருங்க ஆன்டி…நீங்க வந்ததில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்….” வருங்கால மாமியாருக்கு அருகிலிருந்த சோஃபாவை காட்டி அமர செய்துவிட்டு அவசரமாக தூரத்தில் நின்ற தன்னவனிடம் ஓடினாள்.

“ப்ளீஸ் மித்ரன்…. எதுனாலும் இருந்துட்டுப் போகட்டும்….இப்ப என்னைப் பார்க்கன்னு இவ்ளவு தூரம் தேடி வீட்டுக்கு வந்துருக்காங்க…..அதுவே அவங்களுக்கு உங்க மேல உள்ள அக்கறையில் தான… வார்த்தைய சிந்தாதிங்க…ப்ளீஸ் எனக்காக” இவள் சிறு குரலில் கெஞ்சிய வார்த்தைகளில் அவன் பார்வை இவள் மீது பதிய, அந்த நொடி இவளை அவன் ரசிப்பது இவளுக்கு புரிகிறது.

 ‘சைட் அடிக்ற நேரமாடா இது’ தன்னவனை மனதிற்குள் ரசித்துக் கடிந்தாலும் அவன்  கோப கொந்தளிப்பில் தாம் தூம் என ஆடும் மனநிலையிலெல்லாம் இல்லை என்பதை உணர்ந்து மனதிற்குள் ஒரு நிம்மதியும் கொண்டாள் மனோஹரி.

“என்ன சாப்டுறீங்க ஆன்டி….காஃபி ஆர் டீ?” மீண்டுமாய் தன் வருங்கால மாமியாரிடம் போய் நின்றாள்.

“எதுனாலும் ஓகேமா…. எனக்காகன்னு ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே…. உன் கையால தண்ணி குடுத்தன்னா கூட போதும்“ அவர் பதிலில் இவள் கிச்சனை நோக்கி திரும்ப

அதே நேரம் “வீட்ல வேற யாருமில்லையாமா?” என்ற கேள்வியோடு வீட்டின் உள்புறமாய் பார்த்தார் அவன் அம்மா.

 “மனுவோட ஃப்ரெண்ட் மட்டும்தான் இப்ப வீட்ல இருக்கா, மனு அம்மா அப்பா அண்ணாலாம்  வெளிய போய்றுக்காங்க….” இவளுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல சங்கட உணர்வு இருப்பதை உணர்ந்து அவனது அம்மாவிற்கு பதில் சொன்னது மித்ரன்.

“ஓ “ என அந்த பதிலை உள் வாங்கியவர் “நான் அவங்கட்ட பேசனுமேமா” என்றார் இவள் புறமாக.

“எதுனாலும் இப்பவே சொல்லிட்டு போங்க….. மனு அவங்கட்ட சொல்லிப்பா…. அடிக்கடி வந்து அவங்களை தொந்தரவு செய்யாதீங்க….. நான் பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்….”

அத்தனை அமைதியான தொனியில் அவன் அம்மாவை மிரட்டுகிறானா என்ன….?

இவள் இப்போது கெஞ்சலாக தன்னவனைப் பார்த்தாள்.

“போ…..நீ போய் சுகர் போடாத பால் எடுத்துட்டு வா….” இவள் பார்வைக்கு அவன் பதில்.

அவசரமாக கிட்சனுக்குள் புகுந்தவள் பாலும் முறுக்கையும் கொண்டு வந்து அவனது அம்மா முன் வைத்தாள்.

“சாப்டுங்க ஆன்டி….” என உபசரித்தவள் கையோடு கொண்டு வந்திருந்த கேரட் அல்வா கிண்ணத்தை மித்ரனிடமாய் சென்று கொடுத்தாள்.

“பசியில இருக்கீங்கன்னு நினைக்கேன்….ஸ்வீட் சாப்டுங்க…..” சிறு குரலில் அவள் சொல்ல

சிந்தும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்…. “வாய மூடிட்டு இருடான்னு எவ்ளவு அழகா சொல்ற நீ…”

“அவங்க உங்க அம்மா மித்ரன்…..என்ன இருந்தாலும் உங்களை எனக்கு கொடுத்தவங்க… அதனால எனக்கு அவங்க முக்கியம்….” இவளது இந்த பதிலில் அவன் அசைந்து போனான் என இவளுக்கு தெரிகிறது…..

பார்வையை அவனிடமிருந்து உருவிக் கொண்டு மீண்டுமாய் அவன் அம்மாவிடம் போனாள்.

“ நீ  இந்த மேரேஜுக்கு சம்மதிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்மா…. “ அவர் இவள் முகத்தைப் பார்த்து ஆரம்பித்தார்.

“உன்னை எனக்கு பிடிச்சிருக்குது…..இப்ப இங்க உன்னைப் பார்க்கவும் நீதான் அவனுக்கு சரின்னு முழு திருப்தி எனக்கு…. ஆனால் எனக்கு இந்த கல்யாணத்துல எனக்கு இன்னொன்னும்  வேணும்…. அதை நான் உன் பேரண்ட்ஸ்ட்டதான்மா பேச முடியும்…. “ இப்போது அவர் சொல்ல வருவது என்ன என நிச்சயமாய் இவளால் யூகிக்க முடியவில்லை.

இப்பொழுது அவன் ஏதும் சொல்லுவானா என மித்ரனைப் பார்த்தாள். அவன் அவங்க பேசட்டும் … என்பது போல் கண் ஜாடை செய்தான்.

ஆக அவர் என்ன சொல்ல வருகிறார் என இவனுக்குமே தெரியவில்லை….அதை தெரிந்து கொள்ள அவரே சொல்லட்டும் என நினைக்கிறான் போலும்.

“அம்மா அப்பா எப்பனாலும் வந்துடுவாங்க ஆன்டி அவங்க போய் டைம் ஆகுது…..இல்லனா என்ட்ட சொல்லுங்க நான் அவங்கட்ட சொல்லி வைக்கிறேன்…..நெக்‌ஸ்ட் டைம் நீங்க மீட் பண்றதுக்குள்ள அவங்களுக்கும் யோசிச்சு முடிவெடுக்க டைம் கிடைக்கும்….” இன்டைரக்டாய் அவனது அம்மாவை தூண்டினாள் மனோஹரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.