சாரி மனோ...... உனக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் ஆனா என்னாலயும் முடியல மா ..
ப்ளீஸ் டேக் கேர் ...........நான் ..மேல ஏதும் பேச முடியமால் ஆதி புறப்பட்டு சென்று விட,
விறு விறு என்று மேலே ரூமுக்கு சென்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் மனோ!!
தான் ஏன் இவ்வாறு அழுகிறோம்? காரணம் புரியவில்லை அவளுக்கு.. அவனை விட்டு போக வேண்டும் என்ற தீர்மான முடிவில் மாற்றம் ஏதும் காண விரும்பவில்லை என்ற போது தான் ஏன் அழ வேண்டும் அவன் பிரிவிற்காக..? பிடிபடவில்லை பேதைக்கு.
இப்போதெல்லாம் அவள் நினைக்காத நாளில்லை ஏன் இங்கு வந்தேன் ..ஏன் அவனை விரும்பினேன் ..ஏன் அவன் எனக்கானவன் என்ற நினைவு வந்தது எனக்கு ..? பின் ஏன் அவனை ஏற்க முடியா சூழ்நிலையில் என் ஈச
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தா இப்படி நீ என்னை விட்டுட்டு போயிருப்பியா ..?
தான் தானே அவனை விட்டு ஒதுங்க நினைப்பது ... மறந்தாள் அதை மொத்த பழியையும் அவன் மீதே போட்டாள்..
என்னதான் வேண்டும் மனைவி என்ற உணர்வில் இருக்கும் மனோகரிக்கு ...இருக்கும் போது அவனை கடிப்பாளாம் இல்லாத போது அவனிடம் இப்படி பேசுவாளாம் .?