“ ..”
“ இது பாரு மிது…நீ வீட்டுலேயே வெட்டியா இருக்குறதுனால உனக்கு ரொம்ப தனிமையா இருக்கு…மேக் யுவர்செல்ஃப் பிசி… சரி ஆகிடும் “ என்றான் அவன் தன்மையாய்.. அவளது பாவமான முகத்தை பார்த்து திட்ட முடியாமல் ஏற்பட்ட தயக்கம் ஒருபுறம், சோர்வு ஒருபுறமென இருக்க, அவனது இந்த வசனத்தினால் அவள் காளி அவதாரம் எடுப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை அவன்.
“ஒஹோ சோ இதான் காரணம்”
“என்ன டீ ?”
“நீ பிசி…நான் வெட்டி அப்படிதானே”
“அடியே”
“வீட்டுல இருந்தா நான் வெட்டின்னு அர்த்தமா ?நாம ரெண்டே பேரு இருக்குறவீட்டுல, நீ வெளில போயிட்டு வரும்போது துணையாய் இருக்கனுமேன்னு நான் வீட்டுல இருந்தா உனக்கு வெட்டியா தெரியுதா ஷக்தி ? டெய்லி காலைலயும் மதியமும் நாந்தானே சமைக்கிறேன்?வீட்டு வேலை பார்குறது நாந்தானே?”
“சரி ஓகே தப்பா சொல்லிட்டேன்…இப்போ தூங்குறியா ? எனக்கு நாளைக்கு சீக்கிரமாய் போகனும் “ என்று அவன் உறங்க முயற்சிக்க,
“என் கோபம் கூட உனக்கு பெரிய விஷயம் இல்லைல ?” என்று விசும்பினாள் மித்ரா..
“ நிறுத்து மித்ரா.. எனக்கு சமைச்சு போடுன்னு நான் கேட்டேனா ? இந்த நாளு வருஷம் தனியாய் நாந்தானே சமாளிச்சேன்? எனக்கு சேவகம் பண்ணுறதுக்காக நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கல..உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு.. அத யோசி.. இப்போ தயவு செஞ்சு தூங்கு..இல்லன்னா போய் டிவீ பாரு “ என்றவன் பொங்கவும், அவனை முறைத்துவிட்டு
“சரி”என்ற பதிலுடன் வரவேற்பறைக்கு ஓடினாள் அவள்.
“மிது..து….”
“..”
“மித்ரா” என்று இருமுறை குரல் கொடுத்தவன்,பிறகு இதுவும் நல்லதுக்கு தான் என்ற எண்ணத்துடன் உறங்க தொடங்கினான்.. அவனின் பாதியோ அசோகவனத்து சீதையை போல கண்ணீருடன் இரவினை கழித்தாள்… இதுதான் நடந்தது..இனி என்ன நடக்கும்? அடுத்த வாரம் சொல்லுறேன்.
தொடரும்
{kunena_discuss:777}