நாட்கள் நகர்ந்தன பழுத்த இலைகள் உதிர்ந்திருக்க ...கொழுந்து இலைகள் வளர்ந்து அந்த இடத்தை அலங்கரித்தன.... காதலும், காதல் மனைவியும் என அனைத்தும் சுகமாகவே இருந்தது ஆதித்யனுக்கு ...அவன் மனையாளின் மேல் கொண்ட காதலை பறைசாற்றும் விதத்தில் முதலில் இரு ஆண் வாரிசு பின் இரு பெண் வாரிசு என அனைத்து செல்வத்தையும் அதிகமாகவே பெற்று வாழ்ந்து வந்திருந்தனர் ஆதித்யன் பொன்மனோகரி தம்பதியினர் ...
பொன்மனோகரி பிறந்தது திங்கட்கிழமையில் வந்த சிவராத்திரி தினம் என்பதாலோ என்னவோ இயல்பிலேயே சிவ பக்தியை பெற்றிருந்தாள்....தானமும் தர்மமும் அவளின் இல்லற வாழ்வில் நிறைந்து இருக்க ...திங்கள் என்றால் சிவன் கோவில்….. சிவ பக்தை தான் ....!!!!!!! அன்று மட்டும் ஆதித்யன் மனையாள் என்பதை காட்டிலும் சிவனி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன வார்த்தைகள் ..”நீ இல்லாட்டி போனா எனக்கு வாழ்க்கை இல்ல…..உன் கருவுல வளருறது என் குழந்தை ....எனக்கு என் பெண்ஜாதிய ...என் குழந்தைய எப்படி காப்பாத்தணும்ன்னு தெரியும் ...நீ தைரியமா இரு ...கொஞ்ச நாளு பொறுமையா இரு ....ஏதாவது செஞ்சு நான் உன்னை கல்யாணம் செய்துக்கிறேன்” ...என்று வாக்களித்து வந்தான்