"ஓ..என் குட்டிக்கண்ணா!நானும் தான்டா!"
"அப்பா!உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும் வா!"
"என்ன?"
"வா!சொல்றேன்!நிரு நீயும் வா!"-இருவரையும் இழுத்து சென்றவன்.ரகுவை மட்டும் விலக்கிப் போனான்.
அந்த நிலையிலும் ரகுவின் முகம் புன்னகை பூத்தது.
மாடியில் தன்னறையில் இருந்த கீதாவின் புகைப்படத்தை உண்மை தெரிந்த நாள் முதல் பார்த்து கண்களால் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருபவருக்கு...ஏனோ வாய் திறந்து பேச தைரியம் எழவில்லை.
"எக்சலண்ட் ராகுல்!"
"இதை வைத்து எதாவது பண்ண முடியுமாப்பா?"
"என்ன வேணாலும் பண்ணலாம்!ஆனா,கொஞ்சம் காத்திரு!நான் என்ன செய்யுறதுன்னு சொல்றேன்!"
"சரிப்பா!"
"இது இருக்கட்டும்..நம்ம விஷயத்துக்கு வா!"
"என்னது?"
"தீக்ஷா!"-அவன் பேச்சிழந்தான்.
"அம்மா வீட்டுக்கு சீக்கிரம் வர சொல்லி இருந்தாங்க!நான் கிளம்புறேன்."
"உனக்கு கல்யாணம் ஆனது கூட தூரமா இருந்துக்கூட பார்க்க கொடுத்து வைக்கலைடா அவனுக்கு!"-ராகுலின் மனதில் எங்கோ லேசாக வலித்தது.
"ஆமா..நான் கூட கேட்கணும்னு நினைத்தேன்!என்னடா இப்படி பண்ணிட்ட!தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டியாமே!"
"நிரு!என்னால அவளை தப்பா பேசுனதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை!நான் தான் முதல்ல கல்யாணத்தை நிறுத்த சொன்னேன்!ஆனா நான் பண் தப்புக்கு அவ தண்டனை அனுபவிக்கிறது என்னால பார்க்க முடியாது!"
"தெரிந்து பண்ண தப்புக்காக தண்டனையை அனுபவிக்கிாங்க!தெரியாம தப்பு பண்ணிட்டு நரக வேதனையும் சிலர் அனுபவிக்கிறாங்களே!"-ராகுலிற்கு புரிந்தது.
"என்ன பண்ணாலும் தப்பு தப்பு தான்!"
"தெரிஞ்சிக்கோடா ஆதி! நம்ம ராகுல் சரியா முடிவெடுப்பான்.ரகுக்கும் சரியான தண்டனையை தந்தான்.இப்போ தான் பண்ண தப்புக்கு தீக்ஷாவை கல்யாணம் பண்ணி தினந்தினம் தண்டனையை அனுபவிக்கிறான்.அப்படி தானே ராகுல்?"-ராகுலின் மனம் குழம்பியது.எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறார்கள்.
"ஆனா எனக்கு சந்தேகம் என்னன்னா,தண்டனை அனுபவிக்கிறது இவனா?அந்தப்பொண்ணா?"-சரியான கேள்வி!!!
"நான் கிளம்புறேன் நிரு! வரேன்பா!"-என்று பதிலுக்காக காத்திராமல் நகர்ந்தான்.
"இதுக்கு தான் எக்ஸ்பர்ட் ஒருத்தர் தேவைன்னு சொல்றது!"-புன்னகைத்தப்படி சரண் கூறியதில் புதிய நம்பிக்கை இருந்தது.
தொடரும்
{kunena_discuss:877}