என்னதான் அவளாகவே இவனிடம் இருந்து விலகி இருக்க விரும்பிப் போய் அடுத்த அறையில் இருந்தாலும்….அவனது வினியை அடுத்த அறையில் தனியேவிட்டு,.. அதுவும் வந்த முதல் நாளே தனியே விட்டுவிட்டு…..இவன் கதவை தாளிட்டுக் கொள்ள தடுத்த மனதின் காரணமாக…..
ஏசி எஃபெக்ட் இருக்கனுமே என்ற ஒரே தேவைக்காக கதவை சாத்திவைத்துவிட்டு படுத்திருந்த இவள் கணவன்…இவளது தடார் தள்ளலில் சடார் என எழுந்து… என்ன ஏது என பார்க்கும் போது…..
தன் கைகளால் தன் காதுகளை பொத்தியபடி….கணவன் மார்பில் தன் பக்கவாட்டு கன்னம் வைத்து அழுத்தி…கண்களை இறுக்கி மூடியபடி….அவனுள் தஞ்சம் புகுந்திருந்தாள் நிலவினி… முழு உடலிலுமாக நடுங்கிக் கொண்டிருந்தாள் அவன் வினி…..
அந்த ஜல்ஜல் இன்னுமாய் இவள் தலைமேல் கேட்கிறதே….
ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை யவ்வனுக்கு…..அடுத்தும் எதற்கோ பயந்து தன்னில் வந்து புதைந்திருக்கிறாள் தன் மனையாள் என புரிந்த போதும்…. பூப்பந்து போல் தன் மார்பில் வந்து பதுங்கி இருப்பவளை என்ன செய்யவாம்?....…
கைய மேல வச்சீங்கன்னா அப்றம் இருக்குன்னு…இப்பதான் கொஞ்ச நேரம் முன்னால சவால் விட்டுட்டுப் போனவள்…?????
“வினி…”
இவன் குரல் அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை…. அவள் நடுக்கம் குறைவதாகவும் இல்லை…எவ்வளவு நேரம் பார்க்கவாம்?
வலக்கையால் அவள் பின் தலையை ஆறுதலாய் பற்றியவன் இடக்கை, அவளை முதுகோடு சுற்றியது…
“குட்டிப் பொண்ணு என்னாச்சுடா…?”
அவள் எதையும் சொல்லவில்லை….அசையவும் இல்லை….சற்று நேரம் கழித்து காதிலிருந்து கைகளை மட்டுமாய் எடுத்துக் கொண்டவள்….கூர்ந்து கவனித்தாள் சத்தம் எதுவும் இப்போது இல்லை….
அவள் மெல்ல இயல்பு நிலைக்கு வருவதை உணர்ந்து அணைத்திருந்த கைகளை எடுத்துக் கொண்டான் இவன்.
இப்பொழுது முழுவதுமாய் தன் நிலை உணர்ந்து ….அவனை முகம் கூட பார்க்க முடியாமல் கூசி மெல்ல அவனை விட்டு விலகி நடந்தாள் வினி…..இந்த வீட்ல கொலுசு சத்தம்னா யாராவது நம்புவாங்களாமா? அதுவும் அதுக்கு போய் பட்ட பகல்ல பயந்தடிச்சு….இவனைப் போய் பிடிச்சு…..
முகத்தை கொண்டு எங்க போய் வைக்கவாம்?....இருகைகளாலும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு தோன்ற…அந்த அறை வாசலை இவள் அடைந்த நேரம்….
“ஜல்…ஜல்ல்ல்ஜல்ல்ல்…..ஜல்ஜல்ஜல்……” அதே சத்தம்…. மிரண்டு போய் இவனை திரும்பிப் பார்த்தாள்….அவன் என்ன என்பது போல் இப்போது இவளைப் பார்த்தான்….அப்டின்னா சத்தம் இவனுக்கு கேட்கலைனு தான அர்த்தம்….?!!!
பேய் சிலருக்குத்தான் தெரியுமாமே!!!!
இதை அவள் நினைக்கும் போது ,அதற்குள்ளாக அவனிடம் ஓடி, இந்த முறை ஒரு கையால் தன் இரு கண்களை மூடி… முகத்தை அவன் மார்பில் புதைத்து….மறுகையால் அவனை பின்னோடு சுற்றி இருந்தாள்…
“பயமா இருக்கு யவி…நான் இங்கயே இருக்கேன் ப்ளீஸ்..” கெஞ்சினாள்…
இவனுக்கு மறுப்பிருக்குமா என்ன?
“ம்..” என்றவன் சற்று நேரம் மௌனமாய் கழிய….”குட்டிப் பொண்ணு எவ்ளவு நேரம் இப்டியே நிப்ப? ஈவ்னிங் வேற நிக்க வேண்டி இருக்கும்…..கொஞ்சம் படுத்து எழும்பு” என ஆலோசனை வழங்கினான்….
மெல்ல சுயநிலை உறைக்க வேப்பம் காயை வெட்டி சாப்ட்ட ஒரு விகடகவி எக்ஃஸ்ப்ரெஷனோட அவனைவிட்டு விலகி “நீங்க இங்கயே இருங்க…” என கெஞ்சலாய் கேட்டு விட்டு போய் அங்கிருந்த படுக்கையில் படுத்தாள்….. படுக்க படு சங்கடமா… கூச்சமாத்தான் இருக்குது… ஆனா இவ கால் வலி இவளுக்குத்தான தெரியும்….
சின்னதாக தலையாட்டியவன் அறை ஓரத்தில் இருந்த சேரில் உட்காரப் போக…..பேய் வந்தா அவ்ளவு தூரத்துல இருந்து இவன் வந்துட முடியுமா என ஒரு மகா டென்ஷனோடே இவள் படுக்க…..
இப்போதும் இடுப்பில் இடித்தது அவளது பட்டை ஒட்டியாணம்….
அவள் முகம் போகும் போக்கைப் பார்த்தவன்….”அதை வேணா கழற்றிடேன்…..இங்க சேஃபாதான் இருக்கும்….”
“அதுக்கில்ல….என்னால….பின் எதுவும் போட்றுப்பாங்க போல….” ஒருவாறு தர்ம சங்கடமாக விளக்கினாள்…