இப்பொழுது அவன் எழுந்து வந்துவிட்டான்…. அவன் கட்டிலைப் பார்த்து வரவுமே இவளும் எழுந்து படுக்கையை விட்டு இறங்கி நின்றாள்……. முகம்தான் சேம் வேப்பங்காய் சேம் வெட்டி சாப்ட விகடகவியாய்…..கசப்பின் கோணலும்….சிரிக்க முயலும் முயற்சியுமாய்…
முன்ன பின்ன எந்த ஆணுடனும் தனி அறையில் நின்றது கூட கிடையாது…..இதில் இவனை எவ்வளாவாய் அனுமதிக்க?? தவித்துக் கொண்டு இருந்தாள் அவள் தர்மசங்கடமாய்… பயத்துல அவனை பிடித்துக் கொண்டு நிற்கும் போது இதெல்லாம் தோணலையே…!!!!
“நமக்கு வேணும்னா நாம தான் வினி பார்த்துகிடனும்…..எனக்கு எதாவது ஹெல்ப்னா நான் உன்ட்ட தான் கேட்க முடியும்….நீயும் என்ட்டதான் கேட்க முடியும்….இதுல இப்டி ஃபீல் பண்ண என்ன இருக்கு…?” கேட்டபடி நாலஞ்சு ஹூக்கில் மாட்டப் பட்டிருந்த அந்த நகையை இவள் மீது விரல் படாமல் கழற்றி விட்டான்….
“எதுக்கு இவ்ளவு ஹெவியாலாம் நகை போடுற….? இன்னைக்கு போட்டாச்சு சரி….இனிமேல்லாம் இதெல்லாம் போடுவியா? யூஸ் ஆகாதுன்னா பேசாம உங்கம்மாட்டயே கொடுத்து விட்றேன்….” சொல்லியபடியே அதை எடுத்து அவன் அவளிடம் நீட்டினான்.
‘டேய் அது கால் கிலோ தங்கம்…..நீ பாட்டுக்கு வேண்டாம்னு சொல்ற….’ அவன் முகத்தைப் பார்த்தவள்…..”அது கோல்ட் “ என்றாள் மொட்டையாய்…
“ம் தெரியுது….அதான் சொல்றேன்….நீ யூஸ் பண்ணுவன்னா வேணும்னா வச்சுக்கோ, இல்லைனா உங்கப்பாட்ட கொடுத்தா எதுக்காவது அவங்க பிஸினஸ்லயோ இல்ல எதுலயோ யூஸ் ஆகும்ல….இப்டி முடக்கி வைக்றதுல என்ன ப்ரயோஜனம்…?” என்றவன் சட்டென உணர்ந்தவனாய்….
”சாரி இப்பவே நான் இதெல்லாம் பேசி இருக்க கூடாது….. பொதுவா எனக்கு நம்மட்ட இருக்ற எந்த சேவிங்ஸும் கூட அடுத்தவங்களுக்கு ப்ரயோஜனமாற மாதிரி இருக்கனும்னு தோணும்….. இப்டி யூஸ் பண்ணாத நகையா பணத்தை முடக்றதவிட, இந்த அளவு பணத்துல ஒரு வீடு குட்டியா கட்டி வாடகைக்கு விட்டா கூட, வருமானம்றது சின்னதா இருந்தாலும், அது ஒரு குடும்பத்துக்கு தங்குற இடம்னு ஆகுதுல…அப்டின்னு தோணும்….அதான் அப்டி சொல்லிட்டேன்….. மத்தபடி நகை போடுறது எனக்கு பிடிக்காதுன்னுலாம் கிடையாது……இன்ஃபேக்ட் உனக்கு ஜ்வெல்ஸ் அழகா இருக்குது….” என்கிறான்.
’இவனைப் பத்தி தேவையில்லாம தப்பா நினச்சுட்டனோ’ நிலவினியின் மனநிலை இது.
இப்பொழுது அருகிலிருந்த சுவர் அகல வாட்ரோபை திறந்து அதன் நடுவில் தெரிந்த லாக்கர் போன்ற அமைப்பிற்குள் இருந்து “உனக்காக இது வாங்கினேன்…..உனக்கு பிடிக்குமான்னு தெரியலை….கொஞ்சம் கொஞ்சமா உன் டேஸ்ட்டைப் பார்த்து பழகிகிடுறேன் ஓகேவா” என்றபடி ஒரு கிஃப்ட் பார்சலை எடுத்து அவளிடமாக நீட்டினான் யவ்வன்.
அவன் சொன்ன சேவிங்ஸ் தியரியிலும்….நகைய அம்மாட்ட கொடுத்து விட்றேன் சஜசனிலும்…. ஜில் என்றாகி நின்றிருந்த வினி,
அவன் மீதே பார்வையை வைத்திருக்க……அரை குறையாய் திறந்த வாட்ரோப் கதவின் வழியாய் தெரிகிறது…. உள்ளே அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் சில சாரிகளும்….இன்ன பிற பெண்கள் அக்சஸ்சரீஸும்….
இப்பொழுதுதான் அவளுக்கு மெல்ல உறைக்கிறது….இந்த ரூம் அப்படியே அவளது அறையின் அமைப்பில்…..ஏன் இந்த போர்ஷன் முழுவதுமே அவளது வீட்டை நினைவு படுத்தும் ஏராளமான விஷயங்கள்….
‘இவளுக்காய் இத்தனை செய்து வைத்திருக்கிறானா?’ மனம் கவிழ்கிறது தானே மங்கைக்கு… இன்னுமாய் ஜில் ஜில்லாகி இவள்…
இப்பொழுது இவளிடமாக நீட்டுகிறான் ஒரு கிஃப்ட் ராப்ட் பார்சலை…..நகை என திறக்கும் முன்னமே தெரிகிறது….அதைப் பத்தி தான இப்ப பேசினான்…
இருந்த மன நிலையில் அவனிடம் மறுக்க தோன்றவில்லை……வாங்கி அதைப் பிரித்தாள்…. குட்டியாய் க்யூட்டாய் அவளுக்கு பிடித்த வண்ணமாய் நெக்லெஸ்… “ரொம்ப அழகா இருக்கு…..தேங்க்ஸ்”
அடுத்து அங்கிருந்த பெட்டில் சுருண்டவள் மனதில் இவனை என்னதாக நினைக்க வேண்டும் என்ற சிந்தனையே பலமாய்….
அங்கு நிலவினியை விட்டுவிட்டு அனைவரும் வெளியேற அவர்களுடன் தரை தளத்தை அடைந்த பவிஷ்யாவின் கண்ணில் படுகிறான் அபயன்…..அவன் பார்வையே சொல்கிறது அவன் இவளிடம் எதையோ சொல்ல நினைக்கிறான் என…..
இவளுக்கும் தான் சொல்ல வேண்டும்……’என் அப்பாட்ட வந்து பொண்ணு கேட்கிற வரை என் முகத்தை கூட பார்க்காதன்னு…..’
உண்மையில் அவனும் அந்த முடிவுக்குத் தான் வந்திருந்தான்…. என்ன இனி அவன் அவளை எப்போது பார்க்கப் போகிறானோ? ஆக இதை அவளிடமாக நேருக்கு நேராக சொல்லி அனுப்ப எண்ணம்…. அவள் வேறு அந்த லட்டு இன்சிடென்ட்ல இருந்து இன்னும் இவன் முகம் பார்க்கவில்லையே……
ஆக அவள் மீதே பார்வையை வைத்து சுற்றிக் கொண்டிருந்தவன் ஒரு சமயத்தில் அவளிடம் “வினியை சாப்ட வர சொல்லுமா…..அப்டியே மறு வீடு கிளம்பனும்னு அவட்ட சொல்லிட்டு வாம்மா” என இவனது அம்மா சொல்வதை கேட்டு அவள் மாடி ஏறுவதைப் பார்த்து ஏதேச்சையாய் மேலே போவது போல பின் தொடர்ந்தான்…