“பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்கமலே அலைபைவதேன்
மனமல்லவா ஆ ஆ ஆ ....
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைகளெல்லாம்
இளைபர மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்
முடிவுகள் என்றும் ஆரம்பமே
வளவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா ஆ ஆ
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆள்ளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சின் பாரங்கள் எல்லாம்
பேணிய கொஞ்ச நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தன் ஒரு இரவேது
வலியாமல் தான் உள்ளம் கிடையாது
வருந்தாதே... வா ஆ
அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா ஆ ஆ…..”
அது எப்படிதான் இப்படி அமையுதோ எவ்ளோ நாள் ஆச்சு இந்த பாட்ட கேட்டு இப்போ என்னனா சுச்சுவேஷன் சாங் மாதிரி போய்ட்டு இருக்கு என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்....அங்கு அலுவலகத்திலோ ராமிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை பரணியிடம் வசமாக மாட்டியிருந்தான்..வந்ததும் வராததுமாக இவனிடம் வந்து,ராம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வா என்று இழுத்து வந்துவிட்டான்..
மச்சி என்ன பேசனும் சொல்லு என்று ராமே ஆரம்பித்தான்..
நா எதை பத்தி பேச கூப்டேன்னு உனக்கு தெரியாதா???
அவனுக்குத் தெரியுமே..நடு ராத்திரி மகியோட என்ன பேச்சுனு கேக்குறான்னு..எனவே அமைதி காத்தான்..
அப்போ உனக்கு தெரியுது…ம்ம்ம் சரி சொல்லு உனக்கும் மகிக்கும் நடுவுல என்ன நடக்குது..
இதை ராம் சற்றும் எதிர்பார்க்கவில்லை..இரவு பேசினத பத்தி கேக்க போறான்னு பாத்தா இப்படி பேசுறானே..
டேய் பரணி..என்ன இப்படி பேசுற..வீ ஆர் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ்....நா கம்பனி மாற போறத சொல்றதுக்காக கால் பண்ணேன் அவ்ளோதான்..
ஓ..அப்படியா..சரி..நீ கம்பனி மாற்றத அவள்ட்ட ஏன் சொல்லனும்..டீம்ல யாருக்குமே தெரியாத விஷயம் எதுக்காக அவளுக்கு தெரியனும்..
என்ன சொல்வதென்று தெரியவில்லை ராமிற்கு…ஏனெனில் அவனுக்கே பதில் தெரியாதே..அவனும் இரவு முழுவதும் தனக்குள் பட்டிமன்றம் நடத்தி பாத்துவிட்டான் விடைதான் கிடைக்கவில்லை..நா ஏன் இத மகிட்ட சொல்லனும்நு நெனச்சேன்..அவ இத எப்படி எடுத்துப்பானு ஏன் யோசிச்சேன்..சொன்னவுடன் அவள் குரலில் ஏதோ ஏமாற்றத்தை உணர்ந்தேனே அது எனக்கு சின்ன சந்தோஷத்தை கூட குடுத்ததே..அவளிடம் நான் என்ன தான் எதிர்பார்க்கிறேன்..இந்த கேள்வி எதற்குமே அவனிடம் பதில் இல்லை..தன்னினைவில் இருந்தவனை உலுக்கினான் பரணி..
டேய் ராம் நேராவே கேக்குறேன்,ஆர் யு இன் லவ் வித் மகி????
பரணி!!!!!!!!!!