உற்சாகமாய் கிளம்பி கேப்பிற்காக காத்திருந்தாள்..ராமின் அருகிகல் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்…இதயம் வேகமாக துடிப்பது போன்று உணர்ந்தாள்..
ஹாய் ராம்,அக்சுவலி அந்த பெண்டீங் வொர்க்க திவ்யா முடிச்சுரேன்னு சொல்லிட்டா அதான் இந்த ஷிப்ட்லயே வந்துட்டேன்..ஹே தட்ஸ் ஓ.கே மகி,யார் முடிச்சா என்ன..
சிரிப்பையே பதிலாய் அளித்தவள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..என்ன நினைத்தானோ ராமும் எதுவும் கேட்கவில்லை..அலுவலக அறையை திறந்து கொண்டு ஆளுக்கொரு புறமாக நுழைந்தனர்..அவர்களை இமையகலாமல் பார்த்திருந்தது இரு ஜோடி விழிகள்..அதில் ஒன்று நம்ம அண்ணன் பரணி தான்..சாட் ஓபன் செய்து மகிக்கு டைப் செய்தான்..ஏய் குட்டி பொண்ணு என்ன ரெண்டு பேரும் சொல்லிவச்சு ஒரே கலர்ல ட்ரெஸ் பண்ணீட்டு வந்துருக்கீங்களா..
அப்போதுதான் அதை கவனித்தாள் இருவரும் நீல நிற ஆடைதான் அணிந்திருந்தனர்..ஆச்சரியமாய் உணர்ந்தாள்..அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது,
டேய் அண்ணா அதெல்லாம் ஒன்னுமில்ல..தற்செயலா அப்படி அமைஞ்சுருச்சு..உடனே ரொம்ப ஓட்டாத..
ம்ம்ம் நீ நடத்துமா..
அடுத்து திவ்யா மகியின் இடத்திற்கு வந்தாள்..மகியையே பார்த்து கொண்டுஇருந்தாள்..என்ன திவி அப்படி பாக்குற என்னாச்சு என்றாள் கணிணியிலிருந்து கண் அகற்றாமலே..அமூல் பேபி நா ஒன்னு சொல்லட்டா?
என்னடா சொல்லு??
நீயும் ராமும் உள்ள நுழைஞ்சீங்களே,சான்ஸேயில்ல டீ யு பீபுல் ஆர் மேட் ஃபார் ஈச்சதர்டீ சீரியஸ்லி..
உடனே எழுந்து அவள் வாயைப் பொத்தி உட்கார வைத்தாள் மகி,ஏண்டீ இந்த கொலவெறி உனக்கு..யாராவது கேட்டா என்ன ஆகுறது திவ்யா..ஹேய் நா உண்மையதான்டி சொல்றேன்..
நீ ஒரு மண்ணாங்கட்டியும் சொல்ல வேணாம் அம்மா தாயே போய் பொழப்ப பாரு..என்று அவளை அனுப்பிவிட்டு அமர்ந்தவளுக்கு மனதினுள் மழைச்சாரல்..திவ்யாவின் வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது..
“மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடிதே கரையில் எழவா
இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது “
மகியையும் ராமையும் தவிர எல்லாருக்குமே அவங்க காதல் பத்தி தெரியுது..இவங்க ரெண்டு பேரும் எப்போதான் புரிஞ்சுப்பாங்களோ..ம்ம்ம்ம் காத்திருப்போம்….
தொடரும்
{kunena_discuss:952}