அடி மனசுல நீங்க என்ன மிரட்டல…..மிரட்டிறுக்கவும் கூடாதுன்னு ஒரு தவிப்பையும் வச்சுகிட்டு….. நான் இந்த மேரேஜுக்கு சம்மதிச்சுறுக்கேன்…… அதான் எனக்கு அந்த டைம் ஸ்ட்ரெஸ்ல ஃபீவர் வந்துட்டு….”
அவள் விளக்க யவ்வனுக்கு அவளது நிலமை நன்றாகவே புரிகிறது….ஏன் மேரேஜுக்கு முந்தின நாள் அவ்ளவு இயல்பாய் அவ இருந்தான்னும் புரியுது….. அணில்க்கு பயந்தப்ப இவன்ட்ட அவ ஓடி வந்த காரணமும் தான்…. அதோடு டவ்ரி சிஸ்டம்….நீரா லைஃப் இதனாலலாம் அவள் மனசுல இருக்ற பயமும் அவநம்பிக்கையும்…..கூடவே இவன் மேல உள்ள காதலும்….இரண்டுக்கு இடையிலுமாய் அவள் மாட்டி தவிப்பதும்….
இப்போது அருகில் வந்தவன் ஆறுதலாய் அவள் கைப் பற்றினான்….
ஆனால் அவளோ கையை சட்டென உதறி உருவிக் கொண்டு அவனைவிட்டு விலகினாள்….
“ஆனா உங்க மேல இருந்த கோபம் மட்டும் அக்மார்க் கோபம்…..ஏன்னா எப்டி பார்த்தாலும் என் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் நீங்க தான்…..உங்கள மட்டும் எனக்கு பிடிக்காம போயிருந்தா அந்தப் ப்ரச்சனையே வந்திருக்காது…..நான்பாட்டுக்கு என் லைஃப்ஃப பார்த்துட்டு போய்ட்டு இருந்தேன்.. என்ன அப்டி டிஃஸ்டர்ப் பண்ணது நீங்கதான்….”
அவள் விலகவும் ஒரு கணம் அதிர்ந்தவன் அடுத்து அவள் சொன்ன விஷயத்தில் வாய்விட்டு சிரித்தான். அதோடு நிறுத்தாமல் எதையும் எதிர்பாராமல் எதிரில் நின்றவளை சற்றே முரட்டடியாய் தன்புறமாய் இழுத்து… சற்றே முரட்டடியாய் தன்னோடு அணைத்து…..
“ஐயோ விடுங்க….விடுங்க நீங்க…” அவன் மார்பிற்குள் புதைந்திருந்த அவள் முகத்தை முயன்று நிமிர்த்தியபடி விடுபட திமிரிய அவளை விலகவிடாமல் இன்னுமாய் இறுக்கி…. சிவந்திருந்த அவள் காதில் சிறு குரலில் “அப்டி டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி குட்டிப் பொண்ணு” என்றான் சீண்டலாக
அணைத்தவன் சொல்லில்….அதை சொல்லும் போது அவ்வப்போது இவள் செவி மடல் தீண்டிச் சென்ற அவன் இதழ் செயலில்…..முழு மொத்த உடலும் சில்லென சிலிர்த்தாலும்…..நிமிர்ந்து பார்த்து இப்போது முழு கண்ணுமாக முறைத்தாள் வினி….
“நான் எவ்ளவு சீரியஸான விஷயம் பேசிட்டு இருக்கேன்……உங்களுக்கு எல்லாம் விளையாட்டா இருக்கு என்ன…? முதல்ல என்ன விடுங்க …” சொன்னாளே தவிர அவன் பிடியிலிருந்து விலக முனைந்த அவளது திமிரல் எல்லாம் நின்று போயிருந்ததுதான்.
கோபம் போல் பேசிய அவள் உதடுகளில் போய் நின்றது இவன் கண் இப்போது….சற்று குனிந்து அவள் நெற்றியில் தன் நெற்றியை வைத்தான்…
.“மத்ததுல்லாம் கஷ்டமாதான் இருக்குது….ஆனா நீ இவ்ளவு க்யூட்டா ஐ லவ் யூ சொன்னா நான் என்ன செய்றதாம்….? ” அவளிடமே முறையிட்டான் ….
இதழ்களை இழுத்து பழிப்பம் காட்டினாள் அவள். அவ்வளவுதான் அனைத்தையும் மறந்து போனான் அவன்….
தன் வலக்கை ஆட்காட்டி விரலால் அவன் அணைப்பிலிருந்தவள் தாடையை அவன் நிமிர்த்த……கண்களை மூடிக் கொண்டாள் மனைவி…….
என்ன வருகிறதென்று அவளுக்குத் தெரியும்….இதோடு நிற்குமா இல்லை தொடருமா இது?....இதெல்லாம் இப்போது வேண்டாமே என்றிருக்கிறது அவளுக்கு…. தவறென்று எதுவுமில்லைதான் முறையிடம்….. தன்னவனிடம் சங்கமிக்க தடையென்று எதுவுமில்லைதான் இவள்புறம்…..
ஆனாலும் என்றாவது ஒருநாள் இதற்காக அவன் வருந்தினால் மனக்காயப்பட்டுப் போவாள் இவள்…. ஆனால் அதை எப்படிச் சொல்வது இப்போது? எப்படி எடுத்துக் கொள்வான் அவன்?
“அதெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு அபை…..” அதே நேரம் வெளியே பேசிச் செல்லும் அதிபனின் குரல் கேட்கிறது…..இவர்கள் உள்அறைக்குள் நின்று கொண்டிருந்தாலும்…..வெளியே இவர்களது போர்ஷனின் முகப்புக் கதவை திறந்து வைத்திருந்ததால் போலும், மாடியேறியபடி பேசிச் செல்லும் அண்ணன் குரல் இங்குவரை தெளிவாக கேட்கிறது….
அறைக்குள் இருப்பதால் யார் பார்வைக்கும் இவர்கள் பட வாய்ப்பில்லை எனினும் மெல்ல விலகிக் கொண்டான் யவ்வன்…. ஒரு கணம் என்னவென்று புரியவில்லை எனினும் அடுத்து நிம்மதியாகவே இருந்தது இவளுக்கு.
இதற்குள் “கதவு திறந்திருக்குப் போல வினு…..” என சொல்லியபடி வெளிக் கதவைப் பார்த்து போயிருந்தான் யவ்வன்….
“கிராண்டா ஃபீல் ஆச்சுது…அதே டைம் அலட்டிக்கிற மாதிரியும் இல்லாம …. ஒரு திருப்தியான ஃபீல்….சாப்பாடும் ரொம்பவே நல்லா அமஞ்சுது…….எல்லோருமே சந்தோஷமா வந்து போனாங்க….”
நடந்து முடிந்த திருமணத்தைப் பத்தி அபயனிடம் பேசிக்கிண்டே தங்கள் பகுதிக்குப் போய்க் கொண்டிருந்த அதி யவ்வன் வெளியே வரவும் “என்னடா…” என ஆரம்பித்தவன் அவன் பின் சற்று வேக நடையோடு வந்த வினியைப் பார்க்கவும் “வா வினி” என்றான்…
“என்னத்தான்….நம்ம வீட்டுக்குள்ளயே என்ன வான்னு வெல்கம் பண்றீங்க…?” என கிண்டலாக அதிபனுக்கு பதில் சொல்லியபடி வந்த நிலவினியோ….
பின்ன அபயன் எவ்ளவு இயல்பா இவள இந்த வீட்டுப் பொண்னுன்னு ஏத்துகிட்டான்….ஆனா அதிபன் மட்டும் இவளப் பார்த்தா எப்பவும் ஃபார்மல்தான்….