(Reading time: 13 - 26 minutes)

ஹாசினி பதறிப் போய் சரணை பார்க்க,கதிகலங்கிப் போனவன்,”இங்க பாருடி அவந்திகா..உன் மனசில ஆசை வளர்க்க கூடாதுன்னு தான்,வெளிப்படையா என் லவ் மேட்டர் எல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணிட்டு இருக்கேன்.தயவு செய்து குழி தோண்டி என்னை புதைச்சிடாதே..இப்போ நீ விளையாட்டுக்கு தானே சொன்ன”

“இல்லடா மாமா.நிஜமா தான் சொன்னேன்.ஆர்மில சேர்றதுக்கான வழிமுறைகளை அப்பா உன்கிட்ட சொன்னார் தானே..உன்னை மருமகனா ஆக்கிக்க ஆசைப்பட்டு தான் உனக்கு குருவா எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கார்.இது கூட தெரியாம மரமண்டையா இருக்கியே”என்று சொல்ல ஹாசினி அழுதே விட்டாள்.

அவளை சமாதானம் செய்ய,அவந்திகாவின் பேச்சு மட்டும் தான் எடுபடும் என்பதால் மீண்டும் அவளிடமே கெஞ்ச ஆரம்பித்தான் சரண்.

“நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்னு நம்ம வீட்டுக்கு தெரியும் தானே.அவங்க அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இதை நான் பிளஸ்டூ படிச்சிட்டு இருக்கும் போது ரோஸ் கொடுத்து ஐலவ்யூன்னு சொன்னியே..அப்போவே வீட்டுல சொல்லிருக்கணும்..அப்போ எண்ணமோ அய்யா பெரிய இவரு மாதிரி வீட்டுல பேசினீங்க”என்று பழையதை எல்லாம் கிளற,இப்போது ஹாசினி எழுந்து சென்றே விட்டாள்.

பாதி தூரம் சென்றுவிட்ட ஹாசினி திரும்பி பார்க்க,இன்னமும் அவன் அவந்திகாவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டு அழுதுகொண்டே ஓடினாள்.

“எதுக்குடி இப்போ பழி வாங்கின”கோபக் குரலில் கத்திய சரணை சமாதானப்படுத்தும் விதமாய்..

“இப்போ நீ என்ன பண்றேன்னா..என் முன்னாடி மண்டி போட்டு அழாம அவ பின்னாடி போய் சமாதானப்படுத்து..”

“அதான் எப்படின்னு தெரிலையே”என்று அவளிடமே வழியை கேட்கவும் செய்தான்.

“உண்மையை சொல்லு”என்று அவனை வெறுப்பேற்றிய பின்னரே மனமிறங்கியவள்,”என் பிரண்ட்ஸ் எல்லாம் மாமன் பொண்ணு தானேன்னு என்னை உசுப்பேத்திவிட்டு தான் அவந்திகாகிட்ட லவ் சொன்னேன் ஹாசினி.ஆனா உன்கிட்ட லவ் சொல்ல சொல்லி என்னோட ஹார்ட் உசுப்பேத்துச்சுன்னு சொல்லு..அப்படியே நடுவுல மானே..பொன் மானே..ஜிலேபியே..லட்டேன்னு போட்டுக்கணும் சரியா”என்று எடுத்துக் கொடுக்க மறுகணம் சிட்டாய் பறந்து போய்விட்டான் சரண்.

இன்னமும் யஷ்வந்த் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் எழ முயல,”எதுக்காக அவங்க லவ்வை பிரிச்சீங்க”என்று கேட்டான்.

“அவங்க லவ் எப்பவும் பிரியாது.இன்னமும் அன்பு அதிகமாகத்தான் தெரியும்.இவ்வளவு நடந்தும் ஹாசினி என்னை ஒரு வார்த்தை கூட திட்டலை..அவளுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும்..எங்களோட நட்பு அப்படி..அதே நேரம் உங்களுக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன்..சரணோட பர்ஸ்ட் பிரண்டும் நான் தான்.பெஸ்ட் பிரண்டும் நான் தான்.நான் மட்டும் தான்.அதனால இடையில புகுந்து எதுவும் பேசாதீங்க.உங்களோட நட்புக்கு நல்லதில்ல..மீறினால் மொத்தமா உங்களோட பிரண்ட்ஷிப்பை கட் பண்ணி விட்டுடுவேன்”என்றவள் அவனது வியப்பை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டாள்.

‘சரண் மேல இவளுக்கு இருக்க,இந்த பொசசிவ்க்கு பேர் நட்பா! காதலா!’ ஆராய்ச்சியில் இறங்கியது யஷ்வந்தின் மனம்.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.