மதிய உணவை முடித்துவிட்டு ராமின் பாட்டி மற்றும் மற்ற உறவினர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்ப வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தனர்..ராஜசேகர் ராமிடம்,நீங்க எப்போ டெல்லி கிளம்பனும்டா..டிக்கெட் எடுத்துட்டியா??
அத்தம்மா பாருங்க அப்பாவ அதுகுள்ள என்ன விரட்டிவிடலாம்னு பார்க்குராரு..மகி..
பின்ன இப்போதான் கடமை முடிஞ்சுது எங்களுக்கு,இன்னும் பத்து மாசத்துல தாத்தா பாட்டி வேற ஆக போறோம் அப்பறம் என் பொண்டாட்டியோட நா எப்போதான் டூயட் பாடுறது -ராஜசேகர்..
என்னங்க இது பசங்க முன்னாடி பேசுற பேச்ச பாரு என வெட்கப்பட்ட வாறே சமையலறைக்குள் புகுந்து கொண்டார் ராஜி..
சிறியவர்கள் அனைவரும் உற்சாக கூக்குரலிட்டனர்..அப்பா செம பார்ம்ல இருக்கீங்க போல இருக்கே..-பரணி..
தன்வியும் அவள் பங்கிற்கு ஓட்ட மகி உடனே போதும் போதும் உடனே அப்பாவையும் அத்தம்மாவையும் ரொம்ப ஓட்டாதீங்க.அப்பா நா உங்களுக்கு சப்போர்ட் பண்றேன் டோன்ட் வொரி என்று கை குலுக்கி கொண்டாள்..அதற்குள் கையில் ஜுஸோடு வந்த ராஜி எல்லாரும் கொஞ்சமாவது போய் ரெஸ்ட் எடுங்க நீங்க டப்லெட் போடாம உக்காந்து என்ன லூட்டி அடிச்சுட்டு இருக்கீங்க..
பாருடா மகி வயசாய்டுச்சுநு சொல்லாம சொல்றா என்று புன்னகைத்தார்,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
ஒருவாராக அவரவர் அறைக்கு அனைவரும் செல்ல மகி ராஜியிடம் எதாவது உதவ வேண்டுமா என்று கேட்டுவிட்டு மாடிக்குச் சென்றாள்..ராம் தலையில் கை வைத்தவாறு கண்மூடி படுத்திருந்தான்..
ராம் என்னாச்சு தலை வலிக்குதா??
ம்ம் ஆமாடா மார்னிங் சீக்கிரமே எழுந்துட்டேன்ல அதனாலயிருக்கும் பெருசா ஒன்னுமில்லைடா,.
சரி டு மினிட்ஸ் வந்துட்றேன்ப்பா என்று வேகமாக உள்ளறைக்குச் சென்று பட்டுபுடவையை மாற்றிவிட்டு லேசான காட்டன் புடவையில் கையில் தைலத்துடன் வந்தாள்..வாங்கப்பா இப்படி உக்காருங்க என்று அவனை சேரில் அமர்த்தி தலையை பிடித்து விடலானாள்…
தேங்க்ஸ் குட்டிமா வாவ் செமயா இருக்கு உன் மசாஜ் நவ் பெட்டர்டா நீ உக்காரு உனக்கும் தான டயர்டாயிருக்கும்..அவன் எதிரில் பெட்டில் அமர்ந்தவள்..ராம் உங்ககிட்ட ஒண்ணு கேட்கனும் என்றாள் தயங்கியவாறே..
எதுவாயிருந்தாலும் சொல்லு மகி ஏன் தயங்குற??
இல்ல உங்க கேஸ் பாதி முடிஞ்சுருச்சுநு சொன்னீங்களே எவ்ளோ முடிஞ்சுருக்குநு…இல்ல சொல்லகூடாதுனா வேண்டாம் என்று முடித்தாள் அவசரமாய்..
உன்கிட்ட சொல்லாம என்ன..நீயே கேக்கலனாலும் நானே கண்டிப்பா சொல்லிருப்பேன் என அந்த நாளின் நினைவுகளுக்குச் சென்றான்..
அன்று…
சாக்ட்சி கூறியது போன்றே மறுநாள் சரியாக 9 மணிக்கு பரணியோடு வந்துவிட்டான்..ராமை வாசலில் இறக்கிவிட்டு விட்டு திரும்பி செல்ல மனமில்லாமல் சென்றான் பரணி..
உள்ளே நுழைந்தவன் முந்தைய நாள் போன்றே ரிசப்ஷனில் அமர்ந்தான்..5 நிமிடத்தில் சாக்ட்சி அங்கு வந்து சேர்ந்தாள்..சிநேகமாய் சிரித்தவள் வாங்க ராம் உங்க ரூம்மை காட்றேன் என்று அழைத்துச் சென்றாள்..அறையை பார்த்தவனுக்கோ இங்கு பிரம்மாண்டம் என்பதை தவிர வேறு ஒரு சொல்லுக்குமே அர்த்தம் தெரியாதா என்றிருந்தது..
இந்தாங்க ராம் இந்த வாக்கி டாக்கிய கைல வச்சு கோங்க தாத்தா எதுவும் தேவைனா உங்களை இதில் அழைப்பார்..மத்தபடி நீங்க இந்த ரூம்லயே இருந்துக்கலாம்..தினமும் சில பைல்ஸ் செக் பண்ணி டேடா குடுக்க வேண்டியது இருக்கும்..அண்ட் சிஸ்டம்ல தாத்தா கேக்குற சில வொர்க்ஸ் பண்ணணும் மத்தபடி பெருசா ஒண்ணும் இருக்காது..அதர்வா அங்கிள் உங்கள மீட் பண்ணணும்னு சொன்னாரு சோ டுடே எனி டைம் ஹி வில் கம்..உங்களுக்கு புட் எல்லாமே இங்கேயே கொண்டு வந்து குடுத்துடுவாங்க,வேற எதாவது டவுட் இருக்கா??
நேத்து நீங்க ஏன் இங்க யாரும் வேலைக்கு வரமாட்டாங்கநு சொன்னீங்கனு தெரிஞ்சுக்கலாமா??
லேசாக சிரித்தவள்.,அந்த பேப்பர் அட் நாங்க குடுத்து 6 மாசம் இருக்கும் நாலு அஞ்சு பேர் வந்தாங்க பட் எல்லாரையுமே அதர்வா அங்கிள்தான் இன்டர்வியூ பண்ணுவாரு ஏதாவது ஒரு காரணத்தினால எல்லாருமே ரிஜெக்ட் ஆயிட்டாங்க அங்கிள் கிட்ட கேட்டதுக்கு யாரையும் நம்ப முடில..அதுவும் வீட்டுக்கே வர வைக்குறதால நம்பிக்கையானவங்களா பாத்துதான் போடனும்னு சொன்னாரு..நேத்து அவரு ஊர்ல இல்ல அதனாலதான் தாத்தா இன்டர்வியு பண்ணிணாரு..ஏனோ உங்களை அவருக்கு பிடிச்சுருச்சு அதான் உடனே செலக்ட் பண்ணிட்டாரு,அங்கிள் நைட் வந்து கேட்டுட்டு இன்னைக்கே உங்களை பாக்கனும்னு அதுக்காக தான் சொல்லிருக்காரு..