ஃபேனிலிருந்து கவனம் கலைத்து முழு கண்ணால் முன்னால் நின்றவனைப் பார்த்த குழந்தை அடுத்து இறுக மூடியிருந்த தன் இரு கைகளையும் தன் வாய்க்குள் வைத்து எதையோ தெரிவிக்க முனைய….
பார்த்திருந்த மனோவுக்கோ குழந்தையை அள்ளிக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது…. ஏன் தன்னவனையும்தான்…. விஜிலா கொஞ்சம் முன்னால் சொல்லிக் கொண்டு இருந்தாளே…… இன்லாஸ்ட்ட ஏன் நல்லா இருக்க ட்ரைப் பண்றோம்னு ஒரு ரீசன்…. அது ஞாபகம் வந்தது காரணம்.
சிறு குறையும் இல்லாத ஜில்லிப்பு நிறைவுடன் போய் குழந்தையை வாரி எடுத்தாள் இவள்….. அதற்காக தன்னவனை அருகாய் கடந்த அரை நொடி நேரத்தில், தன் முதுகின் பின்னால் முழுதாய் உணர்ந்த அவன் அருகாமையில், அவனை அள்ளி எடுக்க தோன்றிய அந்த நினைவினால் சின்னதாய் சிலிர்த்தாள் இவள்….
அதைக் கூட கவனத்திலெடுத்து காதல் கணவனாய் காதுக்கருகில் “நைட் கணக்கு செட்டில் செய்துக்கலாம்” என சொல்லி சிணுங்க வைத்தான் அவன். அன்றைய இரவு எதை கொண்டு வரப் போகிறது என தெரியாமலே சிவந்தாள் இவள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அங்கு சற்று சீக்கிரமாக லஞ்ச் முடித்துவிட்டு பயோசிக்கு இவளை அழைத்து வந்த மித்ரன்…… வரும் வழியிலேயே காரில் விஜிலாவுடன் இவள் பேசியதை கவனமாக கேட்டுக் கொண்டான்……
அலுவலகத்தில் இவளை சி ஈ ஓ வாக எல்லோருக்கும் அறிமுகப் படுத்தும் சம்பவம் தான் முதல் நிகழ்ச்சி….அதற்கு களஞ்சியம் வந்திருந்தது இவளே எதிர் பாராத ஒன்று…. “இன்னைக்கு ஜாய்ன் செய்றன்னு இன்பா சொன்னாமா…..” என்ற அவர் குரலில் நீ சொல்லையே என்ற மாதிரி எதுவும் இல்லாமல் முழு திருப்திதான் இருந்தது….
‘இந்த டென்டர்னெஸ்ல பாதிய மித்ரன் மேல காமிச்சா கூட நல்லா இருக்குமே’ என்று ஓடுகிறது இவளுள் ஏதோ ஒன்று… இன்னும் ஆக்சிடெண்டுக்கு பிறகு ஒரு வார்த்தை நல்லாருக்கியான்னு மகன்ட்ட நேரடியா கேட்கலை….
அடுத்தும் இவளை எல்லோருக்கும் அறிமுக படுத்தியது களஞ்சியம்தான்…… அந்நேரம் இவள் கண்களுக்கு கிடைக்காமல் காணாமல் போன மித்ரன், அறிமுக படலம் முடியவும் தானே வந்து இவளை இவளுக்கான அறைக்கு அழைத்துப் போனான்.
அப்போதும் இவர்கள் இருவருடனும் உடன் வந்தார் களஞ்சியம்…. ஆனால் அப்சல்யூட் சைலன்ஸ் மட்டுமே அங்கு…..
‘ஹலோ அத்தை இது யார்னு தெரியுதா…...இது தான் உங்க மகன்…..இவங்கள கல்யாணம் செய்ததாலதான் நான் உங்க மருமக….’ அப்டின்னு இன்ட்ரோ கொடுத்திடலாமா என இவள் கடுப்பாகிக் கொண்டிருந்த நேரம்..
அதே நேரம் இவர்கள் அறைக்குள் நுழைய “சரிமா…ஆல் த பெஸ்ட்…” என வாழ்த்தி விடை பெற்றார் இவளது மாமியார்….
இப்போதும் மகனிடம் ஒரு வார்த்தை சொல்லாமலே ஒரு விடை பெறல்…
இதில் இவள் முகத்தில் எரிச்சலின் அடையாள கோடுகள் அணி வகுக்க ஆரம்பிக்கின்றன என்றால்….மித்ரன் முகத்திலோ நிம்மதியின் அடையாளம்…..
“ரொம்ப டைம் எடுப்பாங்களோன்னு நினச்சுட்டேன்….நானும் எவ்ளவு நேரம்தான் வெயிட் பண்றதாம்….?” சொல்லியபடி அந்த அறையின் பக்கவாட்டில் இருந்த கதவை திறந்து கொண்டு இவளை இழுக்காத குறையாக இழுத்துப் போய் உள்ளே தாழிட்டான் அவன்….
முன்பு வர்ஷன் அறையில் உள்பக்கமாக இருந்த அறை போலவே இதிலும்…. பெட் டீவி..இத்யாதி….
‘டேய்….ஆஃபீஸ்க்குன்னு கூட்டிட்டு வந்த நீ……’ இவள் மனம் அவனைப் பார்த்து அலறலாய் சிணுங்க….
அவன் என்ன சொல்ல வந்தானோ… அதற்குள் அங்கு இருந்த டெலிஃபோன் அழைத்தது….
‘இந்த ரூம் நம்பர யார்ட்ட கொடுத்து வச்சுறுக்கான்…?’ என நினைத்தபடி இவள் இணைப்பை ஏற்க முனைந்தால்….
இவள் ஃபோனை அட்டென் செய்யும் முன்பாக தான் அதை எடுத்து
“நான் மிசர்ஸ் மித்ரன் பேசுறேன்…” என்றது ஒரு பெண்குரல்….. ஃபோனுக்காக குனிந்திருந்த மனோ திக்ப்ரமித்து நம்ப முடியாமல் நிமிர்ந்து அந்த பெண்ணைப் பார்க்கவும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள்….
அது…..
Friends உங்களுடைய கமெண்ட்ஸ் எனக்கு இந்த எப்பிக்கு மிகவும் அவசியம்…… அடுத்த அத்யாயத்தில் இதை முடிக்க எனக்கு அது மிக உதவியாக இருக்கும். தொடராய் படித்துக் கொண்டிருப்பவர்கள் உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது என எல்லாவற்றையும் குறிப்பிடும் படியாய் கேட்டுக் கொள்கிறேன்….நன்றி…
தொடரும்!
{kunena_discuss:928}