(Reading time: 29 - 57 minutes)

"யாரு சங்கவியா..?? அவளைப் பத்தி எனக்கு தெரியாது... அவளைப் பத்தி என்ன... உன்னைப் பத்தியும் எனக்கு தெரியும்... சிஸ்டர்ஸ் ரெண்டுப்பேரும் ஒரே மாதிரி... உன்னோட ஆள் பின்னாடியே அந்த சப்னா சுத்திக்கிட்டு இருக்கா... அதை நாங்கெல்லாம் நோட் பண்ணோம்... ஏன் சங்கவியே அது யாருன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு டென்ஷனா இருந்தா... ஆனா நீ மட்டும் அதை கண்டுக்காம இருக்க... ஆனா சங்கு என்ன செய்வா தெரியுமா..??" என்று அவன் கேட்டதும்...

"அவளைப் பற்றி சொன்னதை கண்டுக்கொள்ளாமல்.. கவி என்ன செய்வாள் என்பதை மட்டும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு...  " அப்படி என்ன தான் செய்வாள்.." என்று கேட்டாள்.

"என்ன செய்வாளா..?? நேரா எங்க அம்மாக்கிட்ட போய்... அத்தை ஒரு பொண்ணு தேவாவை லவ் பண்றாளாம்... அவக்கூட தேவாவை சேர்த்து வைங்கன்னு சொல்லி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவா..?? அதனால தாயே இப்படி ஏதாவது அவக்கிட்ட சொல்லிடப் போற... நேரம் வரும்போது நானே அவக்கிட்ட காதலை சொல்றேன்.." என்று குனிந்து தலைக்கு மேலே கை வைத்து கும்பிட்டான்...

தன் தோழி அப்படி செய்யக் கூடியவள் தான் என்பதை உணர்ந்து அதை கற்பனை செய்து பார்த்தவள்... தேவா கையெடுத்து கும்பிட்டதை பார்த்து அந்த சூழ்நிலையை மறந்து கல கலவென சிரித்தாள்... தேவாவுக்கும் அவள் சிரித்ததும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டான்..

அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருப்பதை பிருத்வி பார்த்தான்... முன் போல அதைப் பார்த்து அவனுக்கு பொறாமையோ இல்லை கோபமோ வரவில்லை... ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று அவன் மனதை அழுத்தியது...

நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்து அனைவரும் சாப்பிட்டபின் யுக்தா வீட்டில் எல்லோரும் கிளம்ப... அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிய யுக்தா பிருத்வியிடம் விடை பெறாமலேயே கிளம்பினாள்... எங்கே தானே பேசினால் பிருத்விக்கு பிடிக்காதோ என்று அவள் மௌனமாக இருக்க...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்... 

அவளை பார்க்க வேண்டும்... அவளிடம் பேச வேண்டும்... அவளிடம் மன்னிப்புக் கேட்டு வீட்டிற்கு அழைத்து போக வேண்டும் என்று நினைத்திருந்த பிருத்விக்கு... அவளின் அந்த பாராமுகம் எதையுமே செய்ய விடாமல் செய்தது...

மதி அத்தை, பிரணதி, தேவா எல்லோரும் சொல்லியதை வைத்து பிருத்வி இவளிடம் பேசுவான் என்று எதிர்பார்த்து வந்த யுக்தாவிற்கு அவன் பேசாதது ஏமாற்றமாக போக... அதுவே அவர்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட முடிவை எடுக்க சுலபமாக இருந்தது அவளுக்கு...

அந்த முடிவு ஒருவேளை அவர்கள் இருவரின் நிரந்தர பிரிவாக இருக்குமானால்... அது பிருத்விக்கு தெரிய வந்தால் அப்போதாவது அவனின் நிலையில் மாற்றம் வருமா..??

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.