(Reading time: 22 - 44 minutes)

வன் இப்படி சொன்னவுடன் அவளுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லோருக்கும் அவரவர் செய்வது சரி என்று தான் தோன்றுகிறது. அதன் விளைவு அவர்களுக்கு பாதகமாகும் போதுதான் அதை பற்றி யோசிக்க தோன்றுகிறது.

ப்ரயு இப்போதும் மெளனமாக தான் இருந்தாள். ஆதிதான்,

“ப்ரயு.. ப்ளீஸ்.. நான் சாரி சொல்வதால் நான் செய்தது சரி ஆகி விடாது. ஆனால் “everything is fair in love and war” என்னுடைய காதலினால் நான் செய்ததாக எண்ணி என்னை மன்னித்து விடேன்.. ப்ளீஸ்..”

“இல்லை.. தப்பு என் மேலும் இருக்கிறது.. அப்பா உங்களை பற்றி சொல்லும் போது கேட்டுவிட்டு, நீங்கள் பெண் பார்க்க வரும்போது பிடிக்கவில்லை என்று சொல்லி விடலாம் என்றுதான் எண்ணி இருந்தேன்.. ஆனால் உங்களை பார்த்தவுடன் பிடித்து விட்டதால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டேன்.. மேலும் நீங்கள் அப்போதே மற்ற விவரம் எல்லாம் சொல்லி தான் மணக்க கேட்டீர்கள்... நானும் அப்போது பிரச்சினைகள் வரும் என்று எல்லாம் யோசிக்கவில்லை.. இன்றைக்கு உங்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.. நான் நம் திருமணம் முழுக்க முழுக்க திடீர் திருமணம் என்று எண்ணியிருந்தேன். அப்படி இல்லை எல்லாமே உங்கள் பிளான் படி தான் என்றவுடன் , நீங்கள் சுயநலமாக, என் மனம் பற்றி சிந்திக்கவில்லையோ  என்று தோன்றிவிட்டது. “

“அப்படி எல்லாம் இல்லடா.. ப்ரயு.. எனக்கும் உன் மனம் முழுதும் என்னை விரும்ப வேண்டும் என்ற எண்ணம் தான்.. ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ஹ்ம்ம்”

“ப்ரயு .. ஒருவேளை நான் உன்னிடம் காதல் சொல்லியிருந்தால் நீ என்ன பதில் சொல்லியிருப்பாய்”

“ஹ்ம்ம்.. கண்டிப்பாக சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன் என்றுதான் தோன்றுகிறது”

“நானும் அப்படிதான் எண்ணினேன்.. ஒருவேளை நான் அம்மாவிற்கு வேறு எதாவது ஏற்பாடு செய்து விட்டு, உன்னை திருமணம் செய்யாமல் போயிருந்தால் .. எனக்கு பயமாகவே இருந்திருக்கும்.. இந்த நான்கு வருடங்களில் உனக்கு வேறு யாருடனாவது திருமணம் நடந்து விடுமோ.. என்று..   தவித்து இருப்பேன்.. இந்த எண்ணங்கள் எல்லாம் சேர்ந்துதான் என்னை இப்படி நடந்து கொள்ள தூண்டியிருக்கிறது. .. என்னை மன்னித்துவிடுடா.. “

பிரயுவிற்கு அவனை பார்த்து பாவமாகிவிட்டது. என்னதான் அவனின் நோக்கம் நிறைவேற செயல்படுத்திய வழி தவறு என்றாலும், அதுவும் முழுக்க தவறு என்று சொல்ல முடியாது.. அவளுக்கு தெரியும் .. அவன் எண்ணம் அப்போது இப்படி எல்லாம் இருந்து இருக்காது. இப்போது சொல்லும் போது வேண்டும் என்றால் அவன் சொல்லியிருக்கலாம்.. ஆனால் இப்போது அவளும் அவனை நேசித்தாளே. அதனால் அவனை இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. திருமணத்திற்கு பின் நடந்தது எல்லாம் அவளே சொன்ன மாதிரி இருவருமே எதிர்பாராதது. இதற்கு அவனை வாட்டி என்ன பயன் .. ? ஆனால் வேறு சில கேள்விகள் இருந்தன.

“நான் உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா?” ப்ரயு கேட்க, ஆதி தலையசைத்தான்.

“உங்களுக்கு என்னை பிடித்து இருக்கிறது என்பதற்கு நான் ப்ரியாவுடன் பேசிய அந்த ஒரு சம்பவம் மட்டும் போதுமாக இருந்ததா?”

“இல்லைமா.. உன் friend இடம் நீ பேசியது, உன்னை கவனிக்க ஒரு காரணம் ஆகியது. ஆனால் அதற்கு பின் உன்னை பின் தொடர்ந்து உன்னை பற்றிய எல்லா விவரமும் தெரிந்து கொண்டேன்.. உன்னுடைய செயல்கள் இயல்பாக இருந்தது.. சில சமயங்களில் உன் தங்கைகளோடு உன்னை பார்த்து இருக்கிறேன்.. அப்போது அவர்களிடம் பாசம் என்ற பெயரில் அவர்களை கெடுக்கவும் இல்லாமல், கண்டிப்போடு கூடிய கனிவு காட்டுவதை பார்த்து இருக்கிறேன். சம்பாதிக்கிறேன் என்ற தைரியத்தில் அனாவசியமான அலட்டல்கள் இல்லாமல், அதே சமயம் ஒரு நிமிர்வான தோற்றம் உன்னடையது. அதை நான் ரசித்திருக்கிறேன்.”

“என்னை காதலிப்பதாக சொன்னீர்கள்... ஆனால் உங்களால் என்னை பிரிந்து எப்படி இருக்க முடிந்தது. ?’

“ரொம்ப கஷ்டமாக இருக்கும் ப்ரயு.. இதுவரை உன்னிடம் சொன்னது இல்லை. நான் எப்படி எல்லாம் தவித்து போவேன்.. தெரியுமா? சில நேரங்களில் வேலையாவது ஒன்னாவது என்று விட்டு ஓடி வந்து விடலாம் போல் இருக்கும்... ஆனால் உன் விருப்பம் மதிக்காமல் திருமணம் தான் சீக்கிரம் முடித்து விட்டோம்.. அட்லீஸ்ட் நீ இந்த கல்யாண வாழ்க்கையை ஏற்று கொள்ளவாவது அவகாசம் கொடுப்போம் என்று எண்ணி என்னை கட்டு படுத்திக் கொள்வேன்,”

“ஹ்ம்ம்.. “ என்று மட்டும் சொன்னாள்.

“அதோடு .. சென்ற முறை நான் வந்த போதே நீ என்னை விரும்ப ஆரம்பித்து விட்டதை உணர்ந்தேன்.. அதனால் தான் நான் ஒரு வருடம் என்னுடைய contract ஐ முன்னதாக முடித்துக் கொண்டேன்..”

“ஹ்ம்ம்.. ரொம்ப கஷ்டபட்டீர்களா?”

அவளை அணைத்து அவன் கன்னத்தை அவள் தலை மீது வைத்து .. “ரொம்ப டா.. வேலை முடிப்பது, அங்குள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பது, அதோடு என் management ஆட்களிடம் பேசுவது என்று ஓடிக் கொண்டிருந்தேன்.. அந்த நேரங்களில் எனக்கு energy கொடுப்பது உன்னை பற்றின நினைவுகள் .. உன்னுடைய ரசனைகள் பற்றி எல்லாம் உன்னோடு பேசி தெரிந்து கொள்வேன். “ என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.