(Reading time: 22 - 44 minutes)

டுத்து பிரயுவின் பெற்றோர், தங்கைகள் எல்லோரும் வாழ்த்தி முடிக்கவும், ஏர்போர்ட் வரவும் சரியாக இருந்தது.

சென்னையிலிருந்து பகோதரா சென்றனர்.. அங்கிருந்து டாக்ஸி இல்.. டார்ஜிலிங் சென்றனர்.

நேராக புக் செய்திருந்த ஹோட்டல்க்கு சென்றனர். அங்கே இருவருக்கும் சற்று ஒதுக்குபுறமாக இருந்த cottage கொடுக்க பட்டிருக்க, இருவரும் உள்ளே சென்றனர்..

ரூமின் அழகு அற்புதமாக இருந்தது. இவர்கள் காலையில் வந்து இருந்ததால், உடனே ஒரு டூரிஸ்ட் பஸ் தயாராக இருப்பதாக கூற, இருவரும் அதில் புக் செய்து இருந்தனர்.

அதனால் முதலில் குளிக்க கிளம்பிய ப்ரயு, தன் உடைகளை பெட்டியில் தேட,

அங்கே முழுக்க முழுக்க வெஸ்டேர்ன் அவுட் பிட்ஸ் உடைகளே இருக்க... ப்ரயு முழித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

ஆதி சிரித்துக் கொண்டே அதில் ஒரு டிரஸ் எடுத்துக் கொடுக்க, ப்ரயு அதை அணிய மறுத்தாள்..

“குட்டிமா .. இந்த டிரஸ் போடுடா. .உனக்கு என்ன வாங்கி வந்தேன் என்று கேட்டாய் அல்லவா... இது எல்லாம் தான் வாங்கி வந்தேன்.. “

“வேணாம்.. ஆதிப்பா.. இது எல்லாம் நான் போட்டது இல்லை.. ப்ளீஸ் “

“ப்ரயு ப்ளீஸ் டா. இது எல்லாம் இங்கே தான் போட முடியும்.. அப்புறம் ஊருக்கு போனால் சாரி, சல்வார் தான் போட்டுக் கொள்வாய்.. ப்ளீஸ் .. ப்ளீஸ் என்று கெஞ்ச.

அவளும் அரை மனதாக தலையாட்டினாள்.. அவள் குளித்து அந்த டிரஸ் அணிந்து வர, ஆதி அவளை பார்த்து விசிலடித்தான்..

ப்ரயு.. அவள் கால்களை அழகாக எடுத்துக் காட்டும் ஸ்கின் கலர் லெகீன்ஸ் அணிந்து மேலே பிங்க் கலர் பனியன் டாப் அணிந்து இருந்தாள். அவளின் அழகை எடுத்துக் காட்டும் அந்த உடை அவளுக்கு பொருத்தமாக இருந்தது.

அவளை அள்ளி அணைக்க வந்தவன், அவள் அவனை பிடித்து குளியல் அறையில் தள்ளி விடவும் .. அவன் சிணுங்கி கொண்டே குளிக்க போனான்.

அவன் வெளியே வந்த போது உடைக்கு பொருத்தமாக தலையை உயர்த்தி வாரி ரப்பர் பேண்ட் போட்டு இருந்தாள்.

ஆதியும் ஸ்டோன் வாஷ் பாண்டும் , போலோ டி ஷர்ட்டுமாக அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்த மாணவன் போல் இருந்தான்..

ரூமில் ஹீட்டர் இருந்ததால் தெரியவில்லை. வெளியே காலடி எடுத்து வைக்கவும், குளிரில் இருவரும் நடுங்கினர். இரண்டு பேரும் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டனர். ஆதி ஏற்கனவே shoe அணிந்திருக்க, பிரயுவின் ஹீல்ஸ் குளிரை தாங்குவேனா என்றது. ஆதி அவளுக்கும் எடுத்து வந்திருந்த shoe எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் ரெடி ஆகி டூரிஸ்ட் பஸ்சுக்கு செல்ல, அங்கே.. இருந்த எல்லாரும் பொருத்தமான ஜோடி என்று அவர்களை பாராட்டினர்.

அவனோடு பேசும் போது அவளுக்கு அந்த பனி படர்ந்த மலைகளை பார்க்க மிகவும் பிடிக்கும் என்று சொன்னதை நினைவு வைத்து இந்த இடம் தேர்ந்தெடுத்து இருந்தான். அவள் அந்த அழகை ரசிக்கவும் , அவனுக்கு அவளை ரசிக்க்கவுமாக இருவரும் அன்றைய நாளை கழித்தனர்.

இரவு அறைக்கு வந்த பின், முதலில் சாப்பிட்டு விட்டு ..பிறகு இருவரும் கனப்பு அருகே அமர்ந்தனர். தன் மொபைல் போனில் 80-90  களில் வந்த மெலடி பாடல்களை போட்டு விட்டான் ஆதி.

பிரயுவின் அருகில் வந்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்து,

“ப்ரயு.. நீ என்னை மன்னிசிட்டியா? என் மேல் உனக்கு இன்னும் கோபம் இருக்கா?”

அவள் இப்போ இது என்ன என்பது போல் பார்க்க, அவனின் முகபாவங்கள் அவளை பதில் சொல்ல வைத்தது.

“கோபம் இல்லை ... ஆதிப்பா..”

“அப்போ உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”

“ஹ்ம்ம்.. இது என்ன கேள்வி..?”

“பதில் சொல்லு.”

“பிடிச்சு இருக்கு “

“எப்போலேர்ந்து ..?”

“என்ன திடீர்ன்னு?”

“இல்லை.. நான் உன்கிட்ட நடந்தது எல்லாம் சொன்னப்புறம் தான் உனக்கு என்னை பிடிச்சதா?”

“இல்லை.. அதுக்கு முன்னாடியே பிடிக்கும் தான்... நீங்கதான் ஏற்கனவே கண்டுபிடிச்சதா சொன்னீங்களே?”

“ஹ்ம்ம்.. அப்போ ஏன் .. நான் ஊரில் இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை விட்டு விலகி போன?”

அவனின் கேள்வி புரியாமல் பார்த்தாள்

“அந்த ட்ரைனிங் வேலை இருக்குன்னு.. சொல்லிட்டு ஹால் இல் படுத்து தூங்கினியே .. ஏன்? நான் உன்னை கட்டாயபடுத்துவேன்னு நினைச்சியா? இல்லை.. என்னை பிடிக்காமல் அப்படி நடந்து கிட்டியா?’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.