“அது..” என்று தயங்கியவள் “நான் ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இருந்தேன்.. இல்லியா? அது எல்லாமே என்னோட தூக்கத்திற்கு கொடுத்த மருந்து. நீங்க வரது எனக்கு தெரியாதே? டாக்டரிடம் அந்த மருந்துகளை நிப்பாட்டிடவான்னு கேட்டதற்கு .. அவங்க உடனே நிறுத்த வேண்டாம்.. அது எதாவது சைடு எபக்ட் கொடுக்கும்னு சொன்னாங்க. கொஞ்சம் டோஸ் குறைச்சு கொடுத்தாங்க . உங்க யார்கிட்டயும் அத பத்தி சொல்லலியே.. இனிமேலும் ஏன் சொல்வானேன்னு தான் அங்கியே படுத்துட்டேன்.” என,
ஆதி அவளை தன்னோடு சேர்த்த அணைத்தான்.
‘குட்டிம்மா.. அப்போ நம் வாழ்க்கையை ஆரம்பிப்பதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?”
தன் சிவந்த முகத்தை அவன் மார்பில் மறைத்தவள் , இல்லை என்றாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
அப்போது சரியாக ஆதியின் மொபைல் போனில் ஒலித்த பாடல் ..
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புது கவிதை , இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை ஓஹ் …
கங்கை வெள்ளம் பாயும் பொது கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ
மனங்களின் நிறம் பார்த்த காதல் , முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூ தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட ..
பூவில் சேர்ந்து வாழும் வாசம் காவல் தனை மீறுமே
காலம் மாறும் என்ற போதும் , காதல் நதி ஊருமே
வரையறைகளை மாற்றும்போது தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்ஜோரமே
அன்பே உந்தன் சஞ்சாரமே
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக
பாடல் முடியும்போது ஆதியும், பிரயுவும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.
இனி வரும் காலம் இருவருக்கும் வசந்த காலமாக மாறும் என்று நம்புவோம்.
முற்றும்
ஹாய்.. friends... இந்த கதை ... சில சின்ன சின்ன சம்பவங்களை வைத்து கதையாக மாற்றினேன். கடைசி இரண்டு மூன்று எபிசொட் தவிர மற்ற எல்லாமே யதார்த்தமான விஷயங்களா கொண்டு போனேன். ப்ரயு, ஆதி scenes வரும்போது சிலருக்கு முரண்பாடு தோன்றியிருக்கலாம்.. அதை முடிந்த வரை என்னால் கிளியர் செய்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
கதை படித்து ஆதரவளித்தவர்கள், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.. மேலும் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்.
{kunena_discuss:948}