(Reading time: 9 - 18 minutes)

ண்ணங்களுக்குள்ளேயே உழன்று கொண்டிருந்த சரயூவை ஹாலில் கேட்ட சத்தம் நனவுலகுக்கு கொண்டு வந்தது…

வேகமாக ஹாலுக்கு சென்று பார்த்தவள் திலீப் கோபமாக அங்கிருந்த பூங்கொத்து ஜாடியை தூக்கி போட்டு உடைத்திருப்பதைக் கண்டாள்…

“என்னங்க என்னாச்சு?...” என பதட்டத்துடன் அவனருகில் ஓடி வந்தவளை முறைத்தவன், அவளிடம் எதுவும் சொல்லவில்லை…

“என்னாச்சுங்க…” என அவளும் பயத்துடன் கேட்க,

“எங்க போனாலும் நிம்மதியே இல்லை… சே… என் மானம் மரியாதை எல்லாமே காத்துல பறக்குது… என் முன்னாடி பேச தகுதியே இல்லாதவன் கூட இன்னைக்கு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறான்… இதெல்லாம் எனக்குத்தேவைதானா?...” என அவன் கத்த, அவளுக்கு புரிந்தது…

என்னடா இன்னும் இந்த பிரச்சினையை அவன் எடுக்கவில்லையே என்று நினைத்து முழுதாக இரண்டு நாள் கூட ஆகவில்லை… அதற்குள் அது பூதாகரமாக கிளம்பி வந்து அவளின் முன் விஸ்வரூபமாக படமெடுத்து ஆடியது….

“இனி அவனை சமாதானம் செய்வதென்பது நடக்காத காரியம்…” என அவள் தனக்குள் நொந்து கொண்ட போது,

“நீ இப்படியே இரு… கல்லு மாதிரி… சே… எல்லாம் என் தலைஎழுத்து… கண்டவன் கிட்ட எல்லாம் என்னை பேச்சு வாங்க வச்சிட்டல்லடீ… உனக்கு இப்போ சந்தோஷமா?... போ போய் கொண்டாடு…” என சொல்லிவிட்டு அவள் முகத்திலே விழிக்க பிடிக்காதவன் போல் விறுவிறுவென்று மாடிப்படி ஏறினான் திலீப்…

அவன் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளே அவளது காதுக்குள் ஒலிக்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இதில் எந்த வகையில் நான் பொறுப்பாவேன்?... இது ஏன் அவனுக்கு புரியவே மாட்டிக்குது?..” என அவளும் தலையில் கைவைத்துக்கொண்டு நிற்க, வாசலில் மாமனார் சத்தம் கேட்கவும், எதுவுமே நடக்காதது போல் சட்டென்று முகத்தை மாற்றி புன்னகையுடன் வைத்துக்கொண்டாள்…

ஹாய்… ப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்..

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… மறக்காம…

பை… பை… நெக்ஸ் வீக் அகெய்ன் மீட் பண்ணலாம்…

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.