(Reading time: 25 - 49 minutes)

ரண்டு நாட்களுக்குப் பிறகு,

“என்ன ஜானு…. என்ன யோசனையா இருக்குற?... எக்ஸாம்க்கு அப்ளை பண்ணலையா?..”

“பண்ணனும் ஜனனி…”

“எப்போம்மா?... சர்வர் எரர் வந்ததுக்குப் பிறகா?...”

“ஏண்டி அப்படி சொல்லுற?...”

“பின்ன என்ன ஜானு… பாரு எக்ஸாம்க்கு அப்ளை பண்ணுறதுக்காக இந்த வெப்சைட் ஓபன் பண்ணி வச்சு பத்து நிமிஷம் ஆச்சு… இன்னமும் உன் பேர் கூட டைப் பண்ணாம இருக்குற.. என்னடி ஆச்சு உனக்கு?...”

“………………..”

“ஜானு…………..” என்றபடி ஜானவியின் தோளில் கைவைத்த ஜனனி அவள் முகத்தில் வேதனை தெரிய என்ன ஏது என்று கேட்டாள்… அவளிடம் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் நடந்த நிகழ்வை சொல்ல முடித்த போது,

கொஞ்ச நேரம் ஜானவியை பாவமாக பார்த்தவள், பின்

“அம்மா உன்னை திட்டதான செஞ்சாங்க?....”

“ம்ம்…”

“அடிக்கலையா?...”

“இல்ல….”

“நான் மட்டும் உனக்கு அம்மாவா இருந்தேன்னு வை… உன் தோலை உரிச்சிருப்பேன்…”

“அடிப்பாவி…”

“என்னடி அடிப்பாவி… மரியாதையா எக்ஸாம்க்கு அப்ளை பண்ணுற வழியைப் பாரு… இல்ல நான் பத்ரகாளியா மாறிடுவேன் சொல்லிட்டேன்…”

“அதான் ஆல்ரெடி எனக்கு மாமியாரா தான இருக்குற… இதுல பத்ரகாளி வேறயா?...”

“மாமியாரா?... இருடி என் தம்பிகிட்ட சொல்லி கொடுக்குறேன்…”

அவனின் பெயர் எடுத்ததும், தானாகவே சிரித்தாள் ஜானவி…

“ஆரம்பிச்சிட்டாப்பா….”

“என்ன ஆரம்பிச்சேன்…”

“அதான் லூசாக ஆரம்பிச்சிட்டியே… இன்னும் என்ன சொல்ல நான்…”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… உன் வேலையைப் பாரு ஜன்ன்ன்னி…”

“எதையோ தின்ன மங்கி போல இருந்துச்சு இந்த மூஞ்சி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… இப்போ பிரகாசமா இருக்கு… ம்ம்…”

“சீ… போ…” என சிணுங்கி ஜானவி, “இருடி… இந்த ஃபைலைக்கொடுத்துட்டு வந்துடுறேன்…” என அகன்றதும், அவளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினாள் ஜனனி…

சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவளிடம்,

“ஏன் ஜானவி… என் தம்பியை இந்த எக்ஸாம் எழுத சொல்லிப் பாரேன்…”

“எனக்கும் அந்த எண்ணம் எப்பவோ வந்து வருஷமாச்சு…… நானும் அவர்கிட்ட சொல்லணும்னு நினைப்பேன்… ஆனா அவர் என்ன சொல்லுவாரோன்னு பயத்துலயே ஒதுக்கி வச்சிட்டேன்….”

“லூசாடி நீ… சொன்னாதான அவனுக்கும் தெரியும்… நீ சொல்லாமலே வச்சிட்டிருந்தா அவன் என்ன உன் மனசுக்குள்ளயா வந்து பார்க்க முடியும்?...” என ஜனனி கொஞ்சம் கோபமாக சொல்லி முடித்ததும்,

“நான் வாய் விட்டு சொல்லியே அவருக்கு எதுவும் தெரியவோ புரியவோ மாட்டிக்குது… இதுல என் மனசுக்குள்ள வந்து அவர் பார்க்குறதெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு… ஆனா நடக்குமான்னு தான் தெரியலை…” என தன்னையும் அறியாமல் ஜானவி சொல்லிவிட, ஜனனிக்கு அவளின் மனது புரிந்தது…

“என்ன சொன்ன ஜானு?...”

“ஆ……. அது ஒன்னுமில்லை… அவர் கிட்ட சொல்லுறேன்னு சொன்னேன்… வேற ஒன்னுமில்லை…” என சமாளித்தாள் ஜானவி…

மாலை வேளையில் அவனிடம் இதை எப்படி சொல்லுவது என்று யோசித்துக்கொண்டிருந்தவள் ஒருவழியாக தைரியம் பெற்று, அவனுக்கு போன் செய்தாள்…

“ஹலோ கார்த்தி…”

“ம்ம் சொல்லு…”

“பிசியா இருக்குறீங்களா?...”

“என்ன சொல்லு…”

“இல்ல உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்…”

“என்ன விஷயம் சொல்லு…”

அவன் கேட்டதும், எப்படி சொல்ல என்று யோசித்துக்கொண்டிருந்தாள் அவள்…

எங்கே ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என மாற்றி மாற்றி தனக்குள்ளேயே அவள் உழன்று கொண்டிருந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.