இப்போது ஜீவனின் கண்களில் நீர் கோர்த்து விட்டிருந்தது.
அப்படி நீ சொல்லுர மாதிரி நடந்தா என்னால வேற யாரையும் லைஃப் பார்ட்னரா எல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. அதான் நமக்கு தனியே இருக்கிற ப்ராக்டீஸ் ஏற்கெனவே இருக்கேன்னு சொல்லி அப்படியே இருந்திடுவேன். பதில் சொல்லிட்டேன் இப்போ திருப்தியா?...............
சற்று நேரம் அந்த அறையில் அமைதி சூழ இருவருக்குமே இன்னும் எதுவும் பேச வேண்டும் என்றுத் தோன்றாததால் அமைதியாக அங்கிருந்து நகர்ந்துச் சென்றனர்.
வீட்டிற்குள் வந்த அனிக்கா பெரியவர்கள் முன்னறையில் கதைப் பேசிக் கோண்டிருப்பதைப் பார்த்து அளவளாவி விட்டு உள்ளுக்குள் நுழைந்தாள். மற்ற அறைகள் மூடியிருக்க ரூபனின் அறையில் பேச்சுச் சத்தம் கேட்க ஜீவன் அங்கே தான் இருக்கிறான் என அவனை அழைக்க எண்ணி அருகேச் செல்ல, சாற்றி வைத்திருந்த கதவுக்கு அருகே வந்ததும் உள்ளே நடந்துக் கொண்டிருக்கும் சம்பாஷனை சற்றுத் தெளிவாகக் கேட்க தொடங்கியது
“எந்த ஃபோட்டோ டா ஜீவா?” ரூபன் கேட்டுக் கொண்டிருந்தான் ஜீவனிடம்.
அவள் இல்லாமல் நானாம்
கேட்கிறார்கள் என்னிடம் கேள்வி?
அவள் இல்லாமல் எப்படி
நான் நானாவேன்?
கலை இல்லாத கலைஞனோ?
கல் இல்லாத மண்ணகமோ?
சொல் இல்லாத மானிடமோ?- இல்லை
முள் இல்லாத மலரினமோ?
இல்லா நிலையில்
அவள் இல்லாமல் மட்டும்- எப்படி
நான் நானாவேன்?
தொடரும்
{kunena_discuss:970}