"ம்..உன்னை மாதிரி மகன் கிடைக்க கொடுத்து வைக்கணும்!உன் அப்பா புண்ணியம் பண்ணவர்!"-என்று கூறிவிட்டு நடந்தார் அவர்.
அவரது குரலில் தொனிந்த ஏக்கத்தை ஆதித்யா ஊகிக்காமல் இல்லை...ஆனால்,அவரை ஊர் பழிக்கும் காரணமும் அவனுக்கு விளங்கவில்லை.
"ம்கூம்!"
"ம்.."
"டீ வேணுமா?காப்பி வேணுமா?"
"எனக்கு வேற ஒண்ணு வேணும்!"
"வேற ஒண்ணா!"
"ம்..."
"என்ன அது?"-புரியாமல் அவள் கேட்க,அவளை புரிந்தவன்,அவளை தனக்காய் பிடித்து இழுத்து,அவனது கன்னத்தை அவளுக்காய் காண்பித்தான்.
அதன் மூலம் அவனது வேண்டுதலை ஊகித்தவள்,
"ச்சீ..போடா .ஃப்ராடு!"என்றாள்.
"தர போறியா இல்லையா?"
"ம்ஹூம்!"-அவன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
சில நொடிகள் கடந்தப்பின்,தயங்கியப்படி,அவனது கன்னத்தில் தனது இதழை ஒற்றி எடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தாள் யாத்ரா.
அவளது நாணத்தை இரு நொடிகள் ரசித்தவன்,முகத்தில் புன்னகை படர்ந்தது.
தொடரும்
{kunena_discuss:969}