'அவன் மறையும் வரை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் '
'தாத்தா வீட்டை காட்ட வென அழைத்து வந்ததே அவளுக்கு கஷ்டமாக இருக்க கூடாது என்று தான் ,
அப்படித்தான் அவள் எடுத்துக் கொண்டால் அதை ,
பாதையை பாம்பு மாற்ற , இங்கே வந்தும் கூட கொஞ்ச நேரம் நல்லா தானே பேசிக்கொண்டிருந்தான் ,பாக்க போனால் இது தான் அவர்கள் முதல் முறையாக பேசிய நீண்ட பேச்சு ,அதை சற்றென்று முடிக்க என்ன வந்தது .......
'நாங்க எல்லோரும் என்று சொன்ன போது தான் அவன் நிறுத்தினான் ,ஒரு வேலை அவன் அம்மா அப்பா ஞாபகம் வந்ததோ ,முகம் மாறும் அளவுக்கு இன்னும் வலிக்குதா அவர்கள் மறைவு ,
அவர்கள் எப்போ மறைந்தார்கள் என பெரியப்பா கூறியதை நினைவில் கொண்டு வர பார்த்தாள் ,ஆனால் இரண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
்று நினைத்துக் கொண்டாள்
அவள் கையில் ஒரு கிண்ணத்தை கொடுத்தது பொன்னா
''சாப்பிடுங்க சின்னாச்சி ,இது பூசிணிக்கா அல்வா , நம்ம கொல்ல பூசிணிக்கா ,ரொம்ப நல்லா இருக்கும் ருசி ,சாப்பிட்டு பாருங்க ...''
ரத்த சிகப்புப் கலரில் கண்களை கவர்ந்தது ,சுவையும் அசத்தலாக இருந்தது ...